72 மாணவர்கள் காயம்: ஆசிரியர் இடைநீக்கம்

72 மாணவர்கள் காயம்: ஆசிரியர் இடைநீக்கம்

1 mins read
aac7be07-2244-467a-9504-38ef69cd2899
-

விழுப்­பு­ரம்: விழுப்­பு­ரம் மாவட்­டம், செஞ்­சி­யில் ராஜா தேசிங்கு அரசு ஆண்­கள் மேல்­நி­லைப்­பள்ளி உள்­ளது. இங்கு படித்து வரும் 72 மாண­வர்­களை அவர்­கள் தேர்வை சரி­யாக எழு­த­வில்லை என்ற கார­ணத்­தால் இயற்­பி­யல் ஆசி­ரியா் நந்­த­கோ­பால் மூங்­கில் பிரம்­பால் அடித்­துள்­ளார்.

இத­னால், சில மாண­வா்­க­ளின் முதுகு, கை, கால்­களில் ரத்­தக் காயம் ஏற்­பட்­டது.

இதை­ய­றிந்த மாண­வர்­க­ளின் பெற்­றோர், பள்­ளியை முற்­று­கை­யிட்­டுப் போராட்­டம் நடத்­தி­யதை அடுத்து ஆசி­ரி­யர் நந்­த­கோ­பாலை பணி­யி­டை­நீக்­கம் செய்து மாவட்ட முதன்­மைக் கல்வி அலு­வலா் கிருஷ்­ணப்­பி­ரியா உத்­த­ர­விட்டாா்.

'பிளஸ் 2' மாண­வா்­க­ளுக்கு இயற்­பி­யல் ஆசி­ரி­ய­ரும் உத­வித் தலை­மை­யா­சி­ரி­ய­ரு­மான நந்­த­கோ­பால் கடந்த செவ்­வாயன்று தோ்வு வைத்­தார். அதில், பெரும்­பா­லான மாண­வா்­கள் சரி­யாக விடை­யளிக்­கா­த­தால் கோப­ம­டைந்த ஆசி­ரியா் மாண­வர்­களைக் காயம் ஏற்­படும் அள­வுக்குத் தாக்­கி­யுள்­ளார்.

ஆசி­ரி­யர் நந்­த­கோ­பா­லி­டம் காவ­லர்­கள் விசா­ரணை நடத்­தி­னர். அங்கு வந்த ஆட்­சியா் த.மோக­னும் நந்­த­கோ­பா­லி­டம் விசா­ரணை நடத்­தினாா்.