சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகச் செயல்பட தடைவிதிக்கக் கோரிய வழக்கு தொடர்பில், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் இம்மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து, திண்டுக் கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதிமுகவின் அடிப்படை விதிகளை மீறி இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இப்பதவியில் செயல்பட தடை விதிக்கவேண்டும் என்றும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

