சேலம்: கொடுத்த கடனைக் கேட்டதால் தன்னை அரிவாள்மனையால் தாக்கி காயம் ஏற்படுத்திய தனது மருமகனைத் தான் மனதார மன்னித்துவிட்டதாக மாமியார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இச்சூழலில், "உயர் நீதி மன்றத் துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிக்கு கீழ்நீதி மன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்துசெய்து, அவரை விடுதலை செய்கிறேன்," என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
சேலம் ஆத்தூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2017 டிசம்பர் மாதத்தின் ஒருநாளில், தான் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்துவது குறித்து சுப்பிரமணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட, கடும் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த அரிவாள்மனையை எடுத்து தனது மாமியாரின் முதுகில் வெட்டித் தாக்கினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், சேலம் மகளிர் நீதிமன்றம் சுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் சுப்பிரமணியின் மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் என அனை வரும் முன்னிலையாகினர்.
"எனது மகள் மருமகனுடன் வாழவேண்டும். நானும் என் மருமகனை மன்னித்துவிட்டதால் மரு மகனை விடுதலை செய்யுங்கள்," என மனுதாரரின் மாமியார் நீதி மன்றத்தில் கூறினார். இதுகுறித்து மனுவும் தாக்கல் செய்தார்.
ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும் குடும்பப் பிரச்சினையில் உயர் நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்பதால், மனுதாரரை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
எனது மகள், மருமகனுடன் சேர்ந்து வாழவேண்டும். மூன்று குழந்தைகளையும் வளர்க்கவேண்டும் என்பது முக்கியம். நானும் மருமகனும் சமாதானம் ஆகிவிட்டோம். எனது மருமகனை நான் மன்னித்துவிட்டேன்.
மருமகனை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்த மாமியார்

