துபாயிலிருந்து வந்த தான்சானியா நாட்டுப் பயணி கைது ரூ.9 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் 4 கிலோ தங்கம் பறிமுதல்; நால்வர் கைது

துபாயிலிருந்து வந்த தான்சானியா நாட்டுப் பயணி கைது ரூ.9 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் 4 கிலோ தங்கம் பறிமுதல்; நால்வர் கைது

2 mins read
04338b85-29bf-463d-b304-0609dc708dd6
தான்சானியா நாட்டு ஆடவரின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட ஹெராயின் போதை மாத்திரைகள். படம்: இந்து தமிழ்திசை -

ஆலந்­தூர்: நடி­கர் சூர்யா நடித்த 'அயன்' திரைப்­ப­டத்­தைப் போன்று, வயிற்­றுக்­குள் 86 போதை மாத்தி ரைகளை மறைத்­து­வைத்து கடத்தி வந்த தான்­சா­னியா நாட்­டுப் பயணி சென்னை விமான நிலை­யத்­தில் கைது செய்­யப்­பட்­டார்.

இந்த போதை மாத்­தி­ரை­க­ளின் மொத்த மதிப்பு 9 கோடி ரூபாய் என்று கூறப்­ப­டு­கிறது.

சென்னை மீனம்­பாக்­கம் அைனத்துலக விமா­ன­நி­லை­யத்­துக்கு வரும் ஒரு சில பய­ணி­கள், இது­போல் போதைப்­பொ­ருள், தங்க நகைகளைக் கடத்தி வரும் சம்­ப­வங்­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், துபா­யில் இருந்து அதி­க­ள­வில் போதைப்­பொ­ருள் கடத்தி வரப்­படும் சூழல் உள்­ள­தாக விமான நிலைய சுங்­கத்­துறை ஆணை­யர் உதய்­பாஸ்­க­ருக்கு ரக­சிய தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து, விழிப்புநிலை­யில் இருந்த அதி­கா­ரி­கள், துபா­யில் இருந்து வந்த தான்­சா­னியா நாட்­டைச் சேர்ந்த ஜோசப் பேட்­ரிக், 28, என்ற பய­ணி­யைச் சோதித்­த­னர்.

"உகாண்­டா­வில் இருந்து துபாய் வழி­யா­கச் சென்­னைக்கு சுற்­றுப் பய­ணம் வந்­தேன்," என்று கூறிய ஜோசப்பின் பேச்சு சந்­தே­கப்­படும் விதத்­தில் இருந்­தது.

இதை­ய­டுத்து, அவ­ரு­டைய உடை­மை­க­ளைச் சோதித்ததில் எது­வும் சிக்­கா­த­தால், சென்னை விமான நிலைய மருத்துவ­ம­னைக்கு அழைத்­துச் சென்று அவரை அதி­கா­ரி­கள் 'ஸ்கேன்' செய்து பார்த்­த­னர்.

அப்போது, அவருடைய வயிற்றுக் குள் மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. ஜோசப்பை உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்று, 'இனிமா' கொடுத்து, வயிற்றில் உள்ள 86 மாத்திரைகளையும் வெளி யேற்றினர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவர் விழுங்கியிருந்த மாத்தி ரைகளைச் சுங்க அதிகாரிகள் உடைத்துப் பார்த்தபோது, அவற்றில் 1 கிலோ 256 கிராம் 'ஹெராயின்' போதைப்பொருள் மறைத்து வைக் கப்பட்டிருந்தது. கைதான ஜோசப் பிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், சென்னை அனைத்துலக விமான நிலை­யத்­துக்கு கொழும்பு, துபா­யில் இருந்து வந்த நான்கு பய­ணி­களைச் சுங்­கத்­துறை அதிகா­ரி­கள் சோதித்­த­னர். அவர்­க­ளி­டம் 4 கிலோ 150 கிராம் தங்­கம் இருந்­தது.

அத்துடன், ரூ.18 லட்­சம் மதிப்­புள்ள மின்­னணுப் பொருள்­கள், வெளி­நாட்டு சிக­ரெட்டு­களைக் கடத்தி வந்­த­தும் தெரியவந்தது. அவை அனைத்தையும் கைப்­பற்­றிய அதி­கா­ரி­கள் நான்கு பேரை­யும் கைது­செய்­த­னர். கைப்­பற்­றிய பொருள்­க­ளின் மொத்த மதிப்பு ஏறக்குறைய ரூ.2 கோடி­யா­கும்.