சூறையாடிய பொருள்களை சாலையோரம் வீசிச் செல்லும் மக்கள்

சூறையாடிய பொருள்களை சாலையோரம் வீசிச் செல்லும் மக்கள்

1 mins read
f541113e-2c12-4f94-bdf0-f20b28c2b61d
-

கள்­ளக்­கு­றிச்சி: இரண்டு உடற்­கூராய்­வு­கள் நடந்து முடிந்துள்ள நிலை­யில், கடந்த ஒன்­பது நாள்­க­ளாக பிண­வ­றை­யில் வைக்­கப்­பட்­டி­ருக்­கும் கள்­ளக்­கு­றிச்சி மாண­வி­யின் உட­லைப் பெற்­றுக்­கொள்ள அவ­ரது பெற்­றோர் சம்­ம­தம் தெரி­வித்­துள்­ள­னர். சென்னை உயர் நீதி­மன்ற நீதி­பதி சதீஷ்­கு­மார், இன்று மாலைக்­குள் மாண­வி­யின் இறு­திச் சடங்கை நடத்தி முடிக்­க­வேண்­டும் என்று உத்­தரவிட்­டுள்­ளார்.

இத­னி­டையே, கல­வ­ரத்­தின்­போது பள்­ளி­யில் இருந்து எடுத்துச்சென்ற பொருள்களைத் திரும்ப ஒப்­ப­டைக்கவேண்­டும். இல்­லை­யெ­னில் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என்று காவலர்கள் எச்­ச­ரித்­தி­ருந்­த­தால், எடுத்­துச்­சென்ற பொருள்­களை சாலை ஓரங்­களில் ­மக்­கள் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருள்களைச் சாலை ஓரங்களில் பொதுமக்கள் போட்டு விட்டுச் சென்றனர். இதனால், கனியாமூர் பகுதியில் மேசைகள், நாற்காலிகள், எரிவாயு உருளைகள், சமையல் பாத்திரங்கள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. படம்: ஊடகம்