பிரக்ஞானந்தா: ரஜினி மாமாவின் எளிமை ஈர்த்தது

பிரக்ஞானந்தா: ரஜினி மாமாவின் எளிமை ஈர்த்தது

1 mins read
7a00db2e-dee9-446d-a2eb-22abc2532758
வரும் 28ஆம் தேதி முதல் நடக்கவுள்ள 'செஸ் ஒலிம்பியாட்' தொடரிலும் வெற்றிபெற வேண்டும் என பிரக்ஞானந்தாவை வாழ்த்திய ரஜினி, சதுரங்கப் பலகை ஒன்றையும் ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றையும் பரிசாக வழங்கினார். படம்: டுவிட்டர் -

சென்­னை: ­சென்­னை­யைச் சேர்ந்த சதுரங்க கிராண்ட் மாஸ்­ட­ரான பிரக்­ஞா­னந்தா, 16, தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் ரஜி­னி­காந்த் இல்­லத்­துக்­குச் சென்று அவ­ரைச் சந்­தித்து வாழ்த்­து­கள் பெற்­றார்.

இந்தப் புகைப்­ப­டங்­களை டுவிட்­ட­ரில் பகிர்ந்­துள்ள பிரக்­ ஞா­னந்தா, "மறக்கமுடி­யாத நாள். ரஜினி மாமாவை எனது குடும்­பத்­தி­ன­ரு­டன் சென்று நேரில் சந்­தித்­தேன். இவ்­வ­ளவு உய­ரங்­களை எட்டியும் அவர் மிக­வும் எளி­மை­யாக இருப்­பது என்னை ஈர்த்­தது, மகிழ்ச்சி," எனப் பதி­விட்­டுள்­ளார்.

வரும் 28ஆம் தேதி மாமல்ல புரத்­தில் தொடங்க உள்ள சதுரங்க ஒலிம்பியாட் தொட­ரில் இந்­தியா சார்­பில் இவரும் பங்­கேற்கிறார்.

சதுரங்கத் தொடர்­களில் தொடர்ந்து வெற்­றி­க­ளைக் குவித்து வரும் பிரக்­ஞா­னந்­தாவை வியந்து பாராட்­டிய ரஜினி, அடுத்து நடை­பெற உள்ள சதுரங்க ஒலிம்பி யாட் தொட­ரி­லும் வெற்­றி­பெற வேண்­டும் என வாழ்த்­தி­னார்.