உறவினர்கள், உள்ளூர்க்காரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி புத்தகத்துடன் மாணவி உடல் நல்லடக்கம்

உறவினர்கள், உள்ளூர்க்காரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி புத்தகத்துடன் மாணவி உடல் நல்லடக்கம்

2 mins read
36679012-daa3-4757-96d7-0e28fac1ce9a
-

கடலூர்: கள்ளக்குறிச்சியில் படித்து வந்த 17 வயது 'ப்ளஸ் 2' மாணவி ஸ்ரீமதியின் உடல், அவருக்குப் பிடித்தமான உயிரியல் பாட புத்த கத்துடன் நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்­டது.

மாண­வி­யின் இறுதி ஊர்­வ­லத்­தில் உற­வி­னர்­களுக்­கும் உள்­ளூரைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும் மட்­டுமே அனுமதி வழங்­கப்­பட்­டது. இவர்களைத் தவிர வெளி­யூர் ஆட்­களோ, பிற அமைப்­பி­னரோ யாரும் பங்­கேற்­கக் கூடாது என காவல்­துறை அறிவுறுத்தி இருந்­தது.

அதன்படியே, நேற்று மாணவி ஸ்ரீமதியின் இறுதிச் சடங்குகள் நடந்தன. வாக­னத்­தில் வைத்து அவரது உடல் மயா­னத்­திற்கு கொண்டு­வரப்­பட்டு, அவ­ரது தந்தை கண்­ணீர் மல்க இறு­திச் சடங்கு களைச் செய்­தார்.

மாண­வி­யின் ஆத்மா சாந்தி அடை­யும் வகை­யில் அமைச்­சர், எம்எல்ஏக்கள், உற­வி­னர்­கள் இரண்டு நிமி­ட நேரம் மெளன அஞ்­சலி செலுத்­தி­னர். அதன் பின்னர், "வீர வணக்­கம் வீர வணக்­கம்" என முழக்கமிட்டனர்.

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டம், கனி­ய­ாமூ­ரில் உள்ள சக்தி மெட்ரி­கு­லே­ஷன் மேல்­நி­லைப்பள்­ளி­யில் பயின்று வந்த பிளஸ் 2 மாணவி இம்மாதம் 13ஆம் தேதி பள்­ளி­யில் தனது உயிரை மாய்த்­துக்­கொண்­டார்.

மாண­வி­யின் மர­ணத்­தில் சந்­தே­கம் இருப்­ப­தாகக் கூறி பெற்­றோர், மாணவர் அமைப்பினர் உள்­ளிட்­டோர் போராட்­டம் நடத்தி­னர்.

இதைத்தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதி நடந்த வன்­மு­றை­யில் பள்­ளி­யில் இருந்த வாக­னங்­கள் தீக்­கி­ரை­யா­கின. பொருள்­கள் அடித்து நொறுக்­கப்­பட்­டன. பள்ளி சூறையாடப்பட்டது.

கள்­ளக்­குறிச்சி அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­மனை­யில் மாண­வி­யின் உடல் இரு­முறை உடல்­கூ­ராய்வு செய்­யப்­பட்டு, நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான காவ லர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கிறேன். அவள் மரமாக வளர்ந்து அவளது இறப்புக்கு காரணமானவர்களை வேரறுப்பாள். இனியும் இதுபோன்ற ஒரு சம்பவம் எந்த மாணவிக்கும் நேரிடக்கூடாது.

கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம்