கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்: கூடலூரில் கண்காணிப்பு

கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்: கூடலூரில் கண்காணிப்பு

2 mins read
5866c629-ac5c-4583-9ef7-05254117fc84
-

திரு­வ­னந்­த­புரம்: கேரள மாநி­லம் வய­நாடு பகு­தி­யில் ஆப்­பி­ரிக்க பன்­றிக்­காய்ச்­சல் பரவி உள்­ளதை அடுத்து, தமி­ழ­கத்­தின் நீல­கிரி மாவட்­டத்­தில் கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

மேலும், தமி­ழக - கேரள இதர எல்­லைப் பகு­தி­களும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தாக தமி­ழக சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கேர­ளா­வில் வய­நாடு பகு­தி­யைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு ஆப்­பி­ரிக்க பன்­றிக்­காய்ச்­சல் பாதிப்பு இருப்­பது உறு­தி­யாகி உள்­ளது. இதை­ய­டுத்து, அவ­ருக்கு உரிய சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக கேரள அரசு தெரி­வித்­துள்­ளது.

நீல­கிரி மாவட்­டம் கூட­லூர் பகுதி, வய­நாட்டை ஒட்டி அமைந்­துள்­ளது. எனவே, பன்­றிக்­காய்ச்­சல் பாதிப்பு நீல­கி­ரிக்­கும் எளி­தில் பர­வக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­று­கள் இருப்­ப­தாக சுகா­தார நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, வய­நாட்டை ஒட்டி உள்ள தமி­ழ­கப் பகு­தி­களில் இயங்கி வரும் பொது சுகா­தார மையங்கள் கூடுதல் விழிப்புநிலையில் உள்ள தாக மாநில சுகா­தா­ரத்­துறை துணை இயக்­கு­நர் பாலு­சாமி தெரி­வித்­துள்­ளார்.

எல்­லை­யோ­ரப் பகு­தி­களில் பன்­றிக்­காய்ச்­சல் அறி­கு­றி­யு­டனோ அல்­லது தீவிர காய்ச்­ச­லு­டனோ யாரே­னும் வந்­தால் உட­ன­டி­யாக அவர்­களைத் தனி­மைப்­ப­டுத்த வேண்­டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"மேலும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களை உட­ன­டி­யாக மாவட்ட மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்க உத்­த­ர­விட்­டுள்­ளோம். காய்ச்­சல் இருந்­தால் டெங்கி உள்­ளிட்ட ஐந்து வகை பாதிப்­பு­க­ளைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­த­னை­களைச் செய்ய வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்டுள்­ளது.

"காய்ச்­சல், நுரை­யீ­ரல் தொற்று உள்­ள­வர்­களை நன்கு கண்­காணிக்­க­வும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. பன்­றிக்­காய்ச்­ச­லுக்கு தேவை­யான மருந்து­கள் கையி­ருப்­பில் உள்­ளன. மக்­கள் அச்­சப்­ப­டத் தேவை­யில்லை," என்­றார் பாலு­சாமி.

கேர­ளா­வில் இருந்து தினந்­தோறும் ஏரா­ள­மா­னோர் நீல­கிரி மாவட்­டத்­துக்கு வந்து செல்­கின்­ற­னர். எனவே, அவர்­கள் மூலம் தொற்று பர­வு­வ­தற்கு அதிக வாய்ப்பு உள்­ளதை சுகா­தார நிபு­ணர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.