இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வேலைநிறுத்தம்

1 mins read
0716243f-3693-4eeb-9a7a-a6713e6d6352
-

ராமே­சு­வ­ரம்: இலங்கை கடற்­படை கைது செய்­துள்ள ஆறு மீன­வர்­களை உட­ன­டி­யாக விடு­விக்க வலி­யு­றுத்தி, தமி­ழக மீன­வர்­கள் கால­வ­ரை­யற்ற வேலை­நி­றுத்­தத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இத­னால் ராமே­சு­வ­ரம் கடற்­ப­கு­தி­யில் 800க்கும் மேற்­பட்ட விசைப்­ப­ட­கு­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

மேலும், நாள்­தோ­றும் ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும் என்­றும் மீன­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். கடந்த 21ஆம் தேதி ராமே­சு­வ­ரம் பகு­தி­யைச் சேர்ந்த மீன­வர்­கள் ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட விசைப்­ப­ட­கு­களில் மீன்­பி­டிக்­கச் சென்­ற­னர்.

தனுஷ்­கோடி, தலை­மன்­னார் கடற்­ப­கு­தி­க­ளுக்கு இடையே அவர்­கள் மீன்­பி­டித்­துக் கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென அங்கு வந்த இலங்­கைக் கடற்­ப­டை­யி­னர் ஒரு விசைப்­ப­டகை சுற்­றி­வ­ளைத்­த­னர்.

இலங்கை கடற்­ப­கு­திக்­குள் அத்து­மீறி நுழைந்து மீன்­பி­டித்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு, அந்­தப் பட­கில் இருந்த ஆறு தமி­ழக மீன­வர்­கள் கைதான நிலை­யில், விசைப்­ப­ட­கும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

கைதான மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்­நி­லை­யில், ஆறு மீன­வர்­க­ளை­யும் விசைப்­ப­ட­கை­யும் விடு­விக்க வலி­யு­றுத்தி ராமே­சு­வ­ரம் பகுதி மீன­வர்­கள் நேற்று முதல் கால­வ­ரை­யற்ற வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­தைத் தொடங்கி உள்­ள­னர்.

மேலும், நேற்று ராமே­சு­வ­ரம் பேருந்து நிலை­யத்­தில் மீன­வர்­கள் பங்­கேற்ற ஆர்ப்­பாட்­ட­மும் நடை­பெற்­றது.

800க்கும் மேற்­பட்ட விசைப்­ப­ட­கு­கள் மீன்­பி­டிக்­கச் செல்­லா­த­தால் நாள்­தோ­றும் ஐந்து கோடி ரூபாய் அள­வுக்கு வரு­வாய் இழப்பு ஏற்­படும் என மீன­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.