அதிமுக அலுவலகத்தில் கொள்ளை: ஓபிஎஸ் தரப்பின் மீது காவல்துறையில் புகார்

அதிமுக அலுவலகத்தில் கொள்ளை: ஓபிஎஸ் தரப்பின் மீது காவல்துறையில் புகார்

1 mins read
1c1f6012-3898-4351-8e36-ebcdf7bc57ec
-

சென்னை: அதி­முக தலைமை அலு­வ­ல­க பத்­தி­ரம் ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்­பி­ன­ரால் எடுத்­துச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக அக்­கட்­சி­யின் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் சி.வி.சண்­மு­கம் காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளார்.

ஓ.பன்­னீர்­செல்­வத்­து­டன் வந்­த­வர்­கள் கட்சி அலு­வ­ல­கத்­துக்­குள் அத்­து­மீறி நுழைந்து கட்சி சொத்­து­களை சூறை­யாடி உள்­ள­னர் என்று புகார் மனு­வில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கடந்த 11ஆம் தேதி, முன்­னாள் முதல்­வர் பன்­னீர்­செல்­வம், கையில் ஆயு­த­மேந்­திய 300 அடி­யாட்­கள், குண்­டர்­க­ளு­டன், தன் பிர­சார வாக­னத்­தில் அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­திற்கு வந்­த­தா­க­வும் பின்­னர் அலு­வ­லக கதவை உடைத்து நுழைந்து, அங்­கி­ருந்த அனைத்து பொருள்­க­ளை­யும் அடித்து நொறுக்­கி­ய­தா­க­வும் சி.வி.சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

"அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­தின் அசல் பத்­தி­ரத்தை பன்­னீர்­செல்­வ­மும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர். மேலும் பல அசல் ஆவ­ணங்­க­ளை­யும் காண­வில்லை.

"கொள்­ளை­ய­டித்த ஆவ­ணங்­களை பன்­னீர்­செல்­வம் வந்த வாக­னத்­தில் ஏற்­றி­னர். இது­கு­றித்து காவல்­து­றை­யில் புகார் அளித்­தும் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

"உயர் நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி, தலைமை அலு­வ­ல­கத்­தின் சாவி என்­னி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

"அலு­வ­ல­கத்­திற்­குள் சென்று பார்த்­த­போது அனைத்து அறை­களும் கடப்­பா­ரை­யால் அடித்து நொறுக்­கப்­பட்­டி­ருந்­தன.

"அலு­வ­ல­கக் கணக்கு அறை உள்ளே இருந்த பீரோவை உடைத்து தலைமை அலு­வ­ல­கத்­தின் அசல் பத்­தி­ரம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது," என்று சி.வி.சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 11ஆம் தேதி கட்சி தலைமை அலு­வ­ல­கத்தை பன்­னீர்­செல்­வம் தரப்­பி­னர் கைப்­பற்­றி­னர். எனி­னும், பின்­னர் சென்னை உயர் நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி, எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­பி­டம் தலைமை அலு­வ­ல­கச் சாவி ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.