மதுரை: மதுரையைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகளின் 8.18 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
நான்கு கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து 559 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறிஉள்ளார்.
"இதுவரை 15 வழக்குகளில் சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. பினாமி பெயர்களில் சொத்துகள் இருந்தாலும் முடக்கப்படும். மேலும், 249 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
"மதுரை உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் ஆந்திரா - ஒடிசா எல்லையில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து கஞ்சா பயிரிடுகின்றனர். இவர்கள் மூலமும் தமிழகத்தில் கஞ்சா ஊடுருவுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்றார் சிவபிரசாத்.

