திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் மற்றொரு 'பிளஸ் 2' மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில், அங்கிருந்த மற்ற விடுதி மாணவிகள் அவர்களது பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால், மப்பேடு காவல்துறை யினரும் மாவட்டக் காவல்துறை யினரும் அப்பகுதியில் குவிக்கப் பட்டுள்ளதால் கீழச்சேரி பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
திருவள்ளூர் அருகே உள்ள கீழச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
திருத்தணி அருகே உள்ள தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பூசனம்-முருகம்மாள் தம்பதியின் ஒரே மகள் சரளா, 17.
சரளா, அரசு நிதி உதவி பெறும் புனித இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து தோழிகளுடன் பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர், சக தோழிகள் உணவு சாப்பிடச் சென்றுவிட, தனியாக இருந்த சரளா துாக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
திருவள்ளூர் காவல்துறை யினர் சரளாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் முறை யாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவி னர்கள் கீழச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சரளாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

