சென்னை: வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கைபேசியைப் பயன்படுத்தக் கூடாது, மாணவர்களின் மனம் நோகும் வகையில் எந்த தண்டனையும் வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட 77 வகையான உத்தரவுகளை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
தமிழகப் பள்ளிகளில் இடம் பெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்கவேண்டும் என்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கும் தலைமை ஆசிரியரே உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.
அண்ைமயில், கனியாமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி, 17, என்ற மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்தச் சம்பவத்தின் எதிரொலி யாக தமிழகத்தில் உள்ள அனைத் துப் பள்ளிகளுக்கும் 77 வழிகாட்டி நெறிமுறைகள் பறந்துள்ளன.
இதன்படி, தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு முன் பாகவே பள்ளிக்கு வரவேண்டும்.
பள்ளியில் மாணவர்கள் சண்டை யிட்டுக்கொள்வது, சாலை விபத்து உள்ளிட்ட எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தெரியப் படுத்தவேண்டும்.
குடிநீர், கழிவறை, ஆசிரியர் பற்றாக்குறை போன்றவற்றை அனுமதி பெறாமல் ஊடகங்களுக்குத் தெரிவிக்கக்கூடாது.
பேருந்தில் வரும் மாணவர்கள் மேற்கூைரயில் அமர்ந்து வருவதைத் தவிர்க்க இறை வணக்கக் கூட் டத்தின்போது தக்க அறிவுரைகளை வழங்கவேண்டும்.
வகுப்பறை பற்றாக்குறை காரண மாகவோ அல்லது இதர காரணங் களுக்காகவோ மரத்தடியில் பாடம் நடத்தக்கூடாது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவை தலைமை ஆசிரியர் ஆய்வு செய்து தரத்தையும் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து தலைமை ஆசிரி யர்களும் தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தங்களுக்கு வரும் மின்னஞ்சலை திறந்து பார்த்து அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆசிரியர்கள் வகுப்பறையில் கைபேசியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாணவர்களை எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலையைச் செய்யும்படி பணிக்கக்கூடாது.
மதிய உணவு இடைவேளைக் குப் பிறகு கட்டாயம் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பாடு பயிற்சி அளிக்கவேண்டும்.
பழுதான கட்டடத்தில் மாண வர்களை அமரவைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு, பள்ளிகளில் நடைெபறும் எல்லா நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரி யர்களின் வருகை பதிவு செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. காலை 10 மணிக்குள் செயலியில் வருகையைப் பதிவு செய்யவில்லை எனில், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். தமிழகத்தில் ஏறக்குறைய 6 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

