அதிக வரி கட்டிய நடிகர் ரஜினிக்கு விருது

அதிக வரி கட்டிய நடிகர் ரஜினிக்கு விருது

2 mins read
a9ad888f-9169-42ef-87d5-524358a3cda5
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் ஆக அதிகமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்துக்குப் பதிலாக அவரது இளைய மகள் சௌந்தர்யாவிடம் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருதை வழங்கினார். அருகில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி (இடக்கோடி). படம்: டுவிட்டர் -

சென்னை: தமிழ்­நாட்­டி­லேயே அதி­க­ள­வில் வரு­மான வரி செலுத்­தி­யதற்­காக நடி­கர் ரஜி­னி­காந்துக்கு வரு­மான வரித்­துறை விருது வழங்கி கௌர­வித்துள்ளது.

"நடி­கர் ரஜி­னி­காந்த் சூப்­பர் ஸ்டார் மட்­டு­மல்ல; சூப்­பர் பேய­ரும் கூட (அதிக வரி செலுத்­து­பவர்). இத­னால் மக்­க­ளுக்கு முன்னுதார­ண­மா­கத் திகழ்ந்து வரு­கி­றார்," என புதுச்­சேரி துணை­நிலை ஆளு­நர் தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

வரு­மான வரி அறி­மு­கம் செய்­யப்­பட்ட ஜூலை 24ஆம் தேதி அன்று ஆண்­டு­தோ­றும் வரு­மான வரி தினம் கொண்­டா­டப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், இந்த தினத்தை முன்­னிட்டு தமிழ்­நாடு மற்றும் யூனி­யன் பிர­தே­ச­மான புதுச்­சேரி மண்­ட­லத்­தில் அதி­க­ள­வில் வரு­மான வரி செலுத்­தி­ய­வர்­க­ளைக் கௌர­விக்­கும் நிகழ்ச்சி ெசன்னை ஆழ்­வார்­பேட்டை இசைக் கழ­கத்­தில் நடை­பெற்­றது.

தமிழ்­நாடு, புதுச்­சே­ரிக்­கான வரு­மான வரித்­துறை தலைமை ஆணை­யர் ரவிச்­சந்­தி­ரன் ராம­சாமி தலைைம­யில் நடை­பெற்ற இந்­நிகழ்­வில், சென்னை உயர் நீதி­மன்ற தலைமை நீதி­பதி முனீஷ்­வர்­நாத் பண்­டாரி, தெலுங்­கானா, புதுவை ஆளு­நர் தமி­ழிசை சௌந்­தர ரா­ஜன் உள்­ளிட்­டோர் கலந்­து­கொண்­ட­னர்.

அப்­போது, தமிழ்­நாடு, புதுச்­சேரி­யில் அதி­க­ள­வில் வரு­மான வரி செலுத்­தி­ய­தற்­காக நடி­கர் ரஜி­னி­காந்த் உள்­ளிட்ட நால்­வ­ருக்குத் தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன் விருதுகளை வழங்­கி­னார்.

ரஜி­னி­காந்த் சார்­பில் அவ­ரது மகள் ஐஸ்­வர்யா, தமி­ழிசை சௌந்­தரராஜ­னி­டம் இருந்து விரு­தைப் பெற்­றுக்கொண்­டார்.

"நாட்­டின் பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி அடைய, வரி செலுத்­து­வது இன்றியமை­யா­தது. வரி செலுத்­து­வது ஒவ்வொருவரின் அடிப்­படை கடமை. மக்­கள் தாமாக முன்வந்து வரி­செ­லுத்தவேண்­டும். தமிழகத்­தில் உள்ள சிறார் இல்­லங்­களை மேம்­ப­டுத்துவதற்கு வரி செலுத்­து­வோரும் வரு­மான வரித் துறை­யி­னரும் முன்­வர வேண்­டும்," என்று முனீஷ்­வர்­நாத் பண்­டாரி கேட்டுக்கொண்டுள்ளார்.