புலியைப் பிடித்த மூவருக்கு வெகுமதியுடன் விருது

புலியைப் பிடித்த மூவருக்கு வெகுமதியுடன் விருது

1 mins read
7985a853-d9c5-4471-93fb-9e9047f0948c
மகா­ராஷ்­டிர மாநி­லம், சந்­திரபூ­ரில் உள்ள வனக் கல்­லூ­ரி­யில் வரும் 29ஆம் தேதி நடை­பெ­றும் விழா­வில் மத்­திய வனம், சுற்­றுச்­சூ­ழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவிடம் இருந்து விருது பெறவுள்ள பொம்­மன், மாதன், மீனா காளன். படங்கள்: தமிழக ஊடகம் -

நீல­கிரி: நீல­கிரி மாவட்­டத்­தில் உள்ள மசி­ன­குடி காட்­டு­ப்­ப­குதி யில் வசித்து வந்த 'டி 23' எனப் பெய­ரி­டப்­பட்ட ஆட்­கொல்லிப் புலியை உயி­ரு­டன் பிடிக்க கடு­மை­யாக உழைத்த மூன்று வேட்­டைத் தடுப்­புக் காவ­லா்­க­ளுக்கு தேசிய புலி­கள் பாது­காப்பு ஆணை­யம் வெகுமதியுடன் கூடிய விருது வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது.

இவ்­வி­ருது அனைத்­து­லக புலி­கள் தின­மான ஜூலை 29ஆம் தேதி­யன்று பொம்­மன், மாதன், மீனா காளன் ஆகிய மூவ­ருக்­கு வழங்­கப்­பட உள்­ளது.

நீல­கிரி மாவட்­டத்­தில் வசித்து வந்த நான்கு பேரை­யும் இரு­ப­துக்­கும் மேற்­பட்ட கால்­ந­டை­க­ளை­யும் அந்­தப் புலி கொன்­றுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்கின்றன.

கடந்த ஆண்டு அக்­டோபா் மாதத்தில் அப்புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்­கப்­பட்டு, கா்நாடக மாநி­லம், மைசூ­ரில் உள்ள புலி­கள் மறு­வாழ்வு மையத்­தில் வைத்து பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கிறது.

"பொம்­மன், மாதன், மீனா காளன் ஆகிய மூவ­ரின் கடின உழைப்பை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் விருது வழங்­கப்­பட இருப்பது பெருமையாக உள்ளது," என்று வனத்­துறை அதி­கா­ரி­கள் கூறினர்.