சென்னை: சென்னை மீனம்பாக்கம் அைனத்துலக விமான நிலையத்தில் கண்ணாடியைக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு புதிய நவீன மின்தூக்கிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இவை உள்நாட்டு, அனைத்துலக விமானப் பயணிகள், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மட்டுமன்றி, இயங்கும் படிக்கட்டுகளில் செல்ல சிரமப்படுபவர் களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
இந்த மின்தூக்கிகளின் உள்ளேயிருந்தும் வெளியேயிருந்தும் பார்க்கமுடியும் என்பதால் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மின்தூக்கியும் தலா 20 பேரை தூக்கிச்செல்லும் திறன் படைத்ததாகவும் 360 டிகிரி கோணத்தில் உள்ளேயிருந்து விமானநிலையத்தைப் பார்க்கும் வகையிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது.
மின்தூக்கிகளைச் சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் மக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கிவைத்தார்.

