எட்டயபுரம்: தன் மகள், மருமகன் என்றும் பாராமல், திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுமணத் தம்பதியைக் கொன்றுவிட்டு தலைமறைவான பெண்ணின் தந்தையை நேற்று எட்டயபுரம் காவலர்கள் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் நடந்துள்ளது.
வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான முத்துக்குட்டி, 50, சொந்தமாக வேன், சிறிய ரக லாரி களை வைத்துக்கொண்டு, அவற்றை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறார்.
இவருடைய மகள் ரேஷ்மா, 20, கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
இவர்களது எதிர் வீட்டில் வசித்து வந்த வடிவேல் மகன் மாணிக்கராஜ், 26, என்பவரை ரேஷ்மா காதலித்துள்ளார்.
உறவினர்களான ரேஷ்மா-மாணிக்கராஜின் காதல் விவகாரம் வெளியில் தெரியவர, பெண்ணின் தந்தை முத்துக்குட்டி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவசர அவசரமாக தனது மகளுக்கு மற்றொரு வரனைப் பார்த்து திருமண நிச்சயதார்த்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி காதலர்கள் இருவரும் யாரிடமும் ெசால்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டு வெளியேறி உள்ளனர்.
மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் அங்கேயே தங்கியிருந்தவர்கள், சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்துக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு திரும்பினர்.
கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த மாணிக்கராஜின் வீட்டில் உள்ள அனைவரும் நேற்று முன் தினம் காலை வேலை நிமித்தம் வெளியே சென்றுவிட்டனர். புதுமணத் தம்பதியர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். மாலை நேரத்தில் மாணிக்கராஜின் தாய் மகாலட்சுமி வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மகனும் மருமகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு கதறி னார். எட்டயபுரம் காவல்துறையின ருக்குத் தகவல் கூறப்பட்டது.
காதல் திருமணத்தை விரும்பாத தால் திருமணமான 26 நாளில் புதுமணத் தம்பதியைக் கொன்று விட்டு கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கைது செய்யப்பட்டார்.

