சதுரங்கம்: தமிழ்நாடு தயார்

சதுரங்கம்: தமிழ்நாடு தயார்

2 mins read
ff0e53a5-70cc-4776-a905-55d19aa9a6a8
மாமல்லபுரம் பூஞ்சேரியில் 22,000 சதுர அடி, 52,000 சதுர அடியில் இரு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படம்: தமிழக ஊடகம் -

உலகப் போட்டி இன்று கோலாகல தொடக்கம்: வீரர்கள் வந்தனர்; பிரதமர் மோடி வருகிறார்

சென்னை: உலக சது­ரங்கக் கூட்­டமைப்பு ஏற்­பாட்­டில் ஈராண்­டு­களுக்கு ஒரு முறை நடத்­தப்­படும் 'செஸ் ஒலிம்­பி­யாட்' என்ற உலக சது­ரங்­கப் போட்டி இந்­தி­யா­விலேயே முதன்­மு­த­லாக சென்­னையை அடுத்த மாமல்­ல­பு­ரத்­தில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை­ ந­டக்­கிறது.

அந்த 44வது உலக சது­ரங்­கப் போட்­டி­யின் தொடக்க விழா இன்று சென்னை நேரு திட­லில் மிகக் கோலா­க­ல­மாக நடக்­கிறது. தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின் முன்­னி­லை­யில், பிர­த­மர் நரேந்­திர மோடி போட்டி­யைத் தொடங்கிவைக்­கி­றார்.

உலக சது­ரங்­கப் போட்­டி­யில் 187 நாடு­க­ளைச் சேர்ந்த ஆட­வர், மக­ளிர் பிரி­வு­களில் 356 அணி­கள் மோது­கின்­றன. மொத்­தம் 2,000 சது­ரங்க வீரர்­கள் பங்­கேற்­கி­றார்­கள். போட்­டி­களை நடத்­து­வ­தற்­காக தமிழ்­நாடே தயார்­நி­லை­யில் விழாக்­கோ­லம் கொண்­டி­ருக்­கிறது.

போட்டி நடக்­கும் மாமல்­ல­பு­ரத்­தில் 22,000 சது­ர அடி பரப்­பில் ஓர் அரங்­க­மும் 52,000 சது­ர அடி பரப்­பில் மற்­றொரு அரங்­க­மும் அதி­ந­வீன வச­தி­க­ளு­டன் அமைக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

இந்­நி­லை­யில், நேற்று நடந்த இறு­திக்­கட்ட பணி­களை தமி­ழக முதல்­வர் முக ஸ்டா­லின் நேர­டி­யா­கப் பார்­வை­யிட்டு அனைத்து பிரி­வி­ன­ரை­யும் அதி­கா­ரி­க­ளை­யும் ஊக்­கப்­ப­டுத்­தி­னார். கலை நய­மிக்க நினைவுத் தூண் ஒன்றைத் திறந்து வைத்த முதல்­வர், விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு நேற்று மாலை விருந்­தளித்­துச் சிறப்­பித்­தார்.

போட்­டி­யில் ரஷ்யா, சீனா நாடுகள் பங்கு பெற­வில்லை. உலக சது­ரங்க வீர­ராக பல முறை வென்றுள்ள தமி­ழ­கத்­தைச் சேர்ந்த விஸ்­வ­நாத ஆனந்­தும் போட்டியில் நேரடி­யா­கப் பங்­கேற்­க­வில்லை.

இந்­திய தரப்­பில் மூன்று அணி­கள் களம் இறங்­கு­கின்­றன.

சிற்­பக்­க­லைக்­குப் பெயர்­பெற்ற மாமல்­ல­பு­ரம் இப்­போது வண்­ணக்­கோ­லம் பூண்­டுள்­ளது. உல­கமே உற்­று­நோக்­கும் வகை­யில் இந்­தப் போட்­டியை மிக வெற்­றி­க­ர­மான முறை­யில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமி­ழக அரசு இலக்கு நிர்­ண­யித்து இருப்­ப­தாகத் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

மாமல்­ல­பு­ரத்­தில் 6,000 காவல்­துறை அதி­கா­ரி­கள், 300க்கும் மேற்­பட்ட மருத்­து­வக் குழு­வி­னர், 30 மருத்­துவ வண்­டி­கள் அனைத்­தும் தயார் நிலை­யில் உள்­ளன.

இத­னி­டையே, சது­ரங்­கப் போட்­டி­யில் கலந்­து­கொள்ள சென்னை வந்­தி­ருக்­கும் ஸ்பெ­யின் கிராண்ட் மாஸ்­டர் ஃப்ரான்­சிஸ்கோ வல்­லேஜோ போன்ஸ், இது­வரை தான் ஒன்­பது உல­கப் போட்­டி­களில் கலந்து கொண்டு இருப்­ப­தா­க­வும் ஆனால், மாமல்­ல­பு­ரம் சது­ரங்க அரங்­கைப் போல இது­வரை வேறு எங்­கும் தான் கண்­டதில்லை என்றும் டுவிட்­ட­ரில் வர்­ணித்­தார்.

உலக சது­ரங்­கப் போட்­டியை யொட்டி ஏரா­ள­மான சுற்­றுப்­ப­ணி­கள் சென்­னை வந்­துள்­ள­னர்.