ஈரோடு: இந்திய தேசிய வேவுத்துறை ஈரோட்டில் ஒரு வீடு ஒன்றில் நேற்று திடீர் சோதனை நடத்தியது.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். ஆவணங்கள், கைபேசிகள், மடிக் கணினிகள், சிம் கார்டுகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல்கள் தெரிவித்தன.

