114,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

114,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

1 mins read
5ad922d8-a7b0-4b4e-b4d3-4dd822f780ab
-

சென்னை: தமிழ்­நாட்­டில் 1,545 அரசுப் பள்­ளி­களில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்­கும் 114,095 பிள்­ளை­க­ளுக்கு காலை சிற்­றுண்டி வழங்­கும் திட்­டத்தை தமிழ்­நாடு அரசு தொடங்கியுள்ளது.

'முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம்' என்று குறிப்­பி­டப்­படும் அந்­தத் திட்­டத்­திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்­கப்­பட்டு இருக்­கிறது.

உப்­புமா, கிச்­சடி, ரவா பொங்கல், வெண்­பொங்­கல், காய்­கறி சாம்­பார் உள்­ளிட்ட பல­வும் காலை சிற்­றுண்டி­யில் இடம்­பெறும்.

வாரத்­தில் இரண்டு நாள்­களில் உள்­ளூ­ரில் கிடைக்­கும் சிறு தானி­யங்­க­ளால் தயா­ரிக்­கப்­பட்ட உணவும் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்று அர­சா­ணை­யில் அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

உள்­ளாட்சி அமைப்­பு­கள் மூலம் இந்­தக் காலை உண­வுத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும். மாவட்­டம் தோறும் பள்­ளி­க­ளின் எண்­ணிக்கை­யும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் கணக்­கி­டப்­பட்டு சிற்­றுண்டி விநி­யோ­கிக்­கப்­படும்.