விமானத்தில் பறந்தபடி அரசு பள்ளி மாணவ, மாணவியர் சதுரங்கப் போட்டியில் பங்கேற்றனர். இந்தப் போட்டியை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற 149 பேர் இந்த விமானப் போட்டில் பங்கேற்க தகுதி பெற்றனர். இதற்கிடையே சதுரங்கம்தான் தாம் மிகவும் விரும்பும் விளையாட்டு என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு வாழ்த்தும் கூறியுள்ளார்.
படம்: தகவல் ஊடகம்

