ஓபிஎஸ், ஈபிஸ் மனுக்கள் மீது இன்று விசாரணை

ஓபிஎஸ், ஈபிஸ் மனுக்கள் மீது இன்று விசாரணை

1 mins read
3425e0a5-b702-4c46-aacb-1c10deed6a86
-

சென்னை: எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யில் நடை­பெற்ற அதி­முக பொதுக்­குழு கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­களை ஏற்க முடி­யாது என்று குறிப்­பிட்டு ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்பு உச்ச நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­துள்­ளது.

மேலும், பொதுக்­குழு தொடர்­பாக சென்னை உயர் நீதி­மன்­றம் பிறப்­பித்த உத்­த­ரவை ரத்து செய்ய வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கு விசா­ரணை இன்று நடை­பெற உள்­ளது. இந்த நிலை­யில் எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­பில் உச்ச நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள மனு­வில், அதி­மு­க­வில் தற்­போது ஒருங்­கி­ணைப்­பா­ளர் என்றே பத­வியே இல்லை என்­றும் பொதுக்­குழு தொடர்­பாக ஏதா­வது உத்­த­ரவு பிறப்­பிப்­ப­தாக இருந்­தால் அது தொடர்­பாக எங்­கள் கருத்­தை­யும் கேட்க வேண்­டும் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இரு தரப்புக்கும் இடையேயான மோதல் இப்போது உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.