சென்னை: சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க இருந்த நான்கு நடனக் கலைஞர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளில் சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்க இருந்தனர். இந்திய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடாகி இருந்தது. இந்நிலையில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்த கலைஞர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நான்கு நடன கலைஞர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

