சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்த வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றமே விசாரிக்கும் எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மூன்று வாரத்துக்குள் இவ்வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுகூட்டத்தின்போது சட்டவிதிகள் மீறப்பட்டதாகவும் பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, தாங்கள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்ட மாகத் தெரிவித்துவிட்டனர்.

