சென்னை: நாடு முழுவதும் 24,000 கிராமங்களுக்கு 4ஜி இணைய வசதி வழங்கப்பட உள்ளதாகவும் தமிழகத்தில் 534 கிராமங்கள் பயன்பெறும் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கும் இணைய வசதி கிடைக்கும் என்று கூறியவர், மத்திய அமைச்சரவை இதற்காக ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

