திருப்பத்தூர்: ஆம்பூரில் பொறியியல் கல்லூரி மாணவரைக் கைது செய்தது மத்திய உளவுத் துறை. பயங்கரவாத அமைப்புடன் இளையருக்குத் தொடர்பிருப்பதாக 19 மணி நேர விசாரணைக்குப் பிறகு தெரியவந்ததை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் அன்சார் அலி, 22. இவருக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கும்பலுடன் தொடர்பிருப்பது தெரியவர, மத்திய உளவுத்துறை காவலர்கள் 16 பேர், அதிகாலை 3 மணியளவில் அன்சார் அலியின் வீட்டைச் சுற்றிவளைத்து தூங்கிக்கொண்டிருந்தவரை வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங் களின் பதிவுகளுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் இவர் தனது ஆதரவைத் தெரிவித்து மறு பதிவிட்டதாக தெரிவித்தார்.

