சிறை மரணம் இல்லாத சூழலை உருவாக்க முதல்வர் வலியுறுத்து

சிறை மரணம் இல்லாத சூழலை உருவாக்க முதல்வர் வலியுறுத்து

1 mins read
15a4aaf3-8d61-4b42-b7ed-7a5d85672084
-

சென்னை: தமி­ழ­கத்­தில் காவல் நிலைய மர­ணங்­களே இல்லை என்று சொல்­லும்­ப­டி­யான ஒரு சூழலை ஏற்­ப­டுத்­தித் தரும்­படி முதல்­வர் மு.க.ஸ்டா­லின் காவல் துறை­யி­னரை அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

"அண்­மைக்­கா­ல­மாக சிறைக் கைதி­கள் உயி­ரி­ழக்­கும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இந்­தச் சம்­ப­வங்­கள் இனி நடக்­கக்­கூடாது. தமி­ழ­கக் காவல்­துறை, குற்­றங்­க­ளைக் குறைக்­கும் துறை­யாக இல்­லா­மல் குற்­றமே இல்­லாத துறை­யாக இருக்­க­வேண்­டும். குற்­ற­வா­ளி­களை இரும்­புக் கரம் கொண்டு அடக்­க­வேண்­டும்," என்று அவர் மேலும் கூறி­னார்.

தமி­ழ­கக் காவல்­து­றைக்கு அதி பரின் கௌர­வ­மிக்க கொடி வழங்­கும் விழா சென்னை எழும்­பூர் ராஜ­ரத்­தி­னம் அரங்­கில் நேற்று நடை­பெற்­றது.

இவ்­வி­ழா­வில் காவல்­துறை சார்­பில் துணை அதி­பர் வெங்­கையா நாயு­டு­வுக்கு சிறப்­பான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டு, வீரர்­க­ளின் அணி­வகுப்பு நடை­பெற்­றது. அதன்­பின்­னர், அதி­ப­ரின் கொடியை மு.க. ஸ்டாலினிடம் துணை அதி­பர் வழங்­கி­னார்.

இத­னைத்­தொ­டர்ந்து முதல்­வர் பேசு­கை­யில், "தமி­ழ­கக் காவல் துறைக்கு அதி­ப­ரின் மிக­வும் சிறப்பு மிக்க கொடி வழங்­கப்­பட்­டுள்­ளது. இது, காவல்­து­றைக்கு மட்­டு­மன்றி தமிழ்­நாட்­டிற்கே பெரு­மை­யா­கும். பல மாநி­லங்­க­ளுக்­கும் முன்­னோடி யாக விளங்­கும் தமி­ழ­கக் காவல்­துறை, உயி­ரைப் பொருட்­ப­டுத்­தா­மல் ஆற்­றிய சேவைக்கு அங்­கீ­கார மாக கொடி வழங்­கப்­பட்­டுள்­ளது.

"காவல்­நி­லைய மர­ணங்­கள் இல்லை என்று கூறி­வி­ட­மு­டி­யாது. அது குறைந்­துள்­ளது. இந்த நிலை இன்­னும் மேம்­பட வேண்­டும். காவல்­நி­லை­யங்­களில் மர­ணங்­களே இல்­லாத ஒரு நிலையை ஏற்­ப­டுத்­த­ வேண்­டும்," என்றார்.