கோயில் ேதர் கவிழ்ந்தது; ஐந்து பேர் காயம்

கோயில் ேதர் கவிழ்ந்தது; ஐந்து பேர் காயம்

1 mins read
71fc5698-30b4-44b3-91e7-4570e4b7f498
-

புறப்பட்ட ஒருசில வினாடிகளில் கவிழ்ந்த தேர். படம்: ஊடகம்

புதுக்­கோட்டை: புதுக்­கோட்­டை­ மாவட்டத்தில் ஸ்ரீ பிர­க­தாம்­பாள் உட­னுறை கோகர்­ேணஸ்­வ­ரர் ஆல­யம் உள்ளது. இவ்வாலயத் தில் ஆடித்­தி­ரு­விழாவை முன்­னிட்டு நடந்த ேதரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளானதில் ஐவர் காயமடைந்­த­னர்.

நேற்று காலை 9 மணிக்கு தேர் புறப்­பட்டு இரண்டு அடி கூட வெளியே வராத நிலை­யில் திடீ­ரென சாய்ந்­தது. கொடி அசைக்­கும் முன்­பா­கவே பக்­தர்­கள் தேரை வடம் பிடித்து இழுத்ததுதான் விபத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், தேர் அருகே நின்றுகொண்­டி­ருந்த ஐவர் தேர் கவிழ்ந்­த­தில் காய­ம­டைந்தனர். அவர்கள், புதுக்­கோட்டை அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விசா­ரணையில், தேரில் பல்­வேறு இடங்­களில் பொருத்­தப்­பட வேண்­டிய கொக்கிகள் பொருத்­தப்­ப­ட­வில்லை என்­றும் இது­குறித்து ஏற்கெனவே சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்குப் பக்­தர்­கள் தெரி­வித்­தும் அதனை அதி­கா­ரி­கள் காதுகொடுத்துக் கேட்­க­வில்லை என்­றும் இத­னால்தான் தேர் நிலை தடு­மாறி சாய்ந்­த­தாகவும் கூறப்­ப­டு­கிறது.

புதுக்­கோட்டை மாவட்ட ஆட்­சி­யர் கவிதா ராமு விசா­ரணை மேற்­கொண்டு வரு­கிறார்.