புறப்பட்ட ஒருசில வினாடிகளில் கவிழ்ந்த தேர். படம்: ஊடகம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை கோகர்ேணஸ்வரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத் தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நடந்த ேதரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்தனர்.
நேற்று காலை 9 மணிக்கு தேர் புறப்பட்டு இரண்டு அடி கூட வெளியே வராத நிலையில் திடீரென சாய்ந்தது. கொடி அசைக்கும் முன்பாகவே பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்ததுதான் விபத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், தேர் அருகே நின்றுகொண்டிருந்த ஐவர் தேர் கவிழ்ந்ததில் காயமடைந்தனர். அவர்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணையில், தேரில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட வேண்டிய கொக்கிகள் பொருத்தப்படவில்லை என்றும் இதுகுறித்து ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பக்தர்கள் தெரிவித்தும் அதனை அதிகாரிகள் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றும் இதனால்தான் தேர் நிலை தடுமாறி சாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

