சென்னை: தமிழக அரசு விரைவில் ஆவின் குடிநீர் போத்தல் விற்க ஆலோசித்து வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமல்லாமல் மோர், தயிர், லஸ்ஸி, இனிப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டு களிலும் ஆரோ வாட்டர் பிளாண்ட் உள்ளதால் விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிப்புப் பணி தொடங்க உள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.