தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக நீர்நிலைகள் 86% நிரம்பின; 31 ஊர்களில் காவிரி வெள்ளநீர்

2 mins read
6038eab2-ca06-46b1-82f3-3d1e6dae3a08
பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப் பட்டு உள்ளதால், கரையோர தாழ் பகுதி களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளது. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தென்­மேற்குப் பரு­வ­மழை கேர­ளா­வில் வலு­வ­டைந்து இருக்­கிறது. தமி­ழ­கத்­தின் வான்­வெ­ளி­யில் வளி­மண்­டல சுழற்சி காணப்­ப­டு­கிறது.

இவற்­றின் விளை­வாக தமிழ்­நாட்­டில் உள்ள முக்­கி­ய­மான 90 நீர்­நி­லை­கள் 86.74 விழுக்­காடு நிரம்பி இருப்­ப­தாக அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் தெரி­வித்­தன.

இந்த நிலை­யில், காவிரி உள்ளிட்ட பல தமி­ழக ஆறு­களில் உடைப்பு ஏற்­படும் அள­வுக்கு நீர் நிறைந்து செல்­வ­தா­க­வும் காவி­ரி­யில் உடைப்பு ஏற்­பட்டு தர்­ம­புரி, ஈரோடு, மயி­லா­டு­துறை, திருச்சி, தஞ்­சா­வூர், நீல­கிரி உள்­ளிட்ட மாவட்­டங்­களில் 31 கிரா­மங்­க­ளுக்­குள் தண்­ணீர் புகுந்து விட்­ட­தா­க­வும் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­தக் கிரா­மங்­களில் இருந்து 4,035 பேர் மீட்­கப்­பட்டு நிவா­ரண முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். மொத்­தம் 14 மாவட்­டங்­களில் தாழ்­வான பகு­தி­களில் வசிக்­கும் மக்­கள் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மேட்­டூர் அணைக்கு வழக்­கத்தை­விட அதி­க­மான தண்­ணீர் வந்து கொண்டு இருப்­ப­தால் அந்த அணை­யில் இருந்து 2.10 லட்­சம் கன அடி தண்­ணீர் காவிரி ஆற்றில் திறந்­து­வி­டப்­ப­டு­கிறது.

கன்­னி­யா­கு­மரி, திரு­நெல்­வேலி, தேனி, விரு­து­ந­கர் மாவட்­டங்­க­ளி­லும் தொடர்ந்து மழை பெய்து வரு­வ­தால் பல ஆறு­க­ளி­லும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு உள்­ளது.

அனைத்து பகு­தி­க­ளி­லும் மீட்பு படை­யி­னர் தயார் நிலை­யில் வைக்­கப்­பட்டு இருப்­ப­தாக தமி­ழக அரசு அறி­வித்து இருக்­கிறது.

வைகை ஆற்­றில் வெள்­ளப்­பெருக்கு ஏற்­பட்டு இருப்­ப­தால் கரை­யோர மக்­கள் எச்­ச­ரிக்­கப்­பட்­ட­னர். திருப்­பத்­தூர் மாவட்­டம் ஆம்பூர் அருகே கானாற்­றில் திடீர் வெள்ளம் ஏற்­பட்­ட­தால் தரைப்­பா­லம் அடித்­துச் செல்­லப்­பட்­டது.

ஈரோடு அருகே உள்ள பவானி சாகர் அணை­யின் நீர்­மட்­டம் 102 அடியை எட்­டி­ய­தால், பவானி ஆற்­றில் 7,350 கன­அடி உப­ரி­நீர் திறக்­கப்­பட்­டுள்­ளது.

அணை­யின் நீர்­மட்­டம் அதி கரிப்பதால் அணை­யின் கீழ்ப்­ப­கு­தி­யில் உள்ள ஒன்­பது மதகு­களில் உபரி நீர் திறக்­கப்­ப­டு­கிறது.

இத­னால், கரை­யோ­ரப் பகு­தி­களுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு உள்­ளது.

இத­னி­டையே, மேட்­டூர், வீராணம், குண்­டூர் உள்­ளிட்ட 10 ஏரி­கள் முழு கொள்­ள­ளவை எட்டி­விட்­ட­தாகவும் இதர ஏரி­கள் 70 முதல் 90% வரை நிரம்பி இருப்­ப­தா­க­வும் வியா­ழக்­கி­ழமை அதி­காரி­கள் தெரி­வித்­த­னர்.

மாநி­லத்­தின் நீர்­நி­லை­களில் மொத்­தம் 224.297 ஆயி­ரம் மில்லி யன் கன அடி தண்­ணீரை தேக்க முடி­யும். இப்­போது 194.55 ஆயி­ரம் மில்­லி­யன் கன அடி தண்­ணீர் நிரம்பி இருக்­கிறது என்று மூத்த அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

இவ்­வே­ளை­யில், மாநி­லத்­தின் பல பகு­தி­க­ளி­லும் மிதமான மழை முதல் கடும் மழை தொட­ரும் என்று வானிலை ஆய்வு நிலை­யம் அறி­வித்து இருக்­கிறது.