பூந்தமல்லி: சொந்த வீட்டிலேயே தன் மனைவி, தாயின் 550 சவரன் தங்கநகைகளைத் திருடி, அவற் றைக் காதலிக்குப் போட்டு அழகு பார்த்த தொழிலதிபர் அவரது காதலியுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த பூந்த மல்லி, முத்துநகரைச் சேர்ந்தவர்கள் சேகர், 40. இவருடைய தம்பி ராஜேஷ், 37. திருமணமான இரு வரும் தாயுடன் வசித்து வந்தனர்.
சேகர், பூந்தமல்லியில் இனிப்புக் கடையும் நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டுப் பிரிந்துசென்ற சேகரின் மனைவி, அண்மையில் மீண்டும் கணவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார். தனது பீரோவில் தான் வைத்திருந்த 300 பவுன் நகைகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேகரின் தாயார் வைத்திருந்த 200 பவுன் நகைகள், 5 தங்கக் கட்டிகள், தம்பி மனைவியின் நகைகள் என 550 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
விசாரணையில், தங்கக்கட்டிகள் உட்பட 550 சவரன் தங்க நகைகளைத் திருடி தனது காதலியான வேளச்சேரியைச் சேர்ந்த சுவாதியிடம், 22, கொடுத்ததை சேகர் ஒப்புக் கொண்டார்.
விசாரணையில், எப்போதும் நவீன ஆடைகளுடன் தோன்றும் சுவாதியின் பேச்சிலும் அழகிலும் மயங்கிய சேகர், அவர் கேட்கும் போதெல்லாம் நகையை வாங்கி பரிசாகக் கொடுத்துள்ளார். சொகுசு கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார் சுவாதி. இதனை எல்லாம் சேகரிடம் சுவாதி மறைத்துவிட்டார். சுவாதியிடம் இருந்து சொகுசு கார் மீட்கப்பட்டது. விசாரணை நடக்கிறது.

