சீமான்: ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறில்லை

1 mins read
7ce336d3-362e-4354-ba58-ee6e4f42d622
-

சென்னை: தமி­ழக ஆளு­நர் ஆர்.என். ரவி­யைச் சந்­தித்து ரஜி­னி­காந்த் அர­சி­யல் பேசி­ய­தில் தவறு இல்லை என்­றும் யார் வேண்டு மானா­லும் ஆளு­ந­ரைச் சந்­தித்து அர­சி­யல் பேச­லாம் என்­றும் நாம் தமி­ழர் கட்­சி­யின் ஒருங்கிணைப்­பா­ளர் சீமான் கூறியுள்­ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்தான் ஆளுநரை நியமித்துள்ளனர். பிறகு, ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

"அர­சி­யல் என்­பது ஒரு வாழ்­வி­யல். அனைத்து இடங்­களிலும் அர­சி­யல் பேச­வேண்­டும். அப்­போ­து­தான் நாடு முன்­னேறும். மனி­த­னின் உரி­மைக்காகப் பேசும் அனைத்­தும் அர­சி­யல்­தான். அந்த உரிமை ரஜி­னிக்கு இருக்­கிறது," என்று சீமான் கூறி­யுள்­ளார்.

2024 மக்­க­ள­வைத் தேர்­த­லுக்கு பாஜக தனது முழு பலத்­தை­யும் பயன்­ப­டுத்­தும் என்று எதிர்­பார்க்­கப்படு­கிறது. ரஜி­னி­காந்த் அதில் ஒரு கரு­வி­யாக தென்­னிந்­தியா முழு­வ­தும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்­றும் அர­சி­யல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.