பாஜகவினர் 40 பேர் கைது

பாஜகவினர் 40 பேர் கைது

1 mins read
aec1f9c4-9fc5-4def-aa44-99bbe30a3da3
-

கோவை: கோவை அவி­னாசி சாலை­யில் 10.3 கிலோ மீட்­ட­ருக்கு மேம்­பா­லம் கட்­டும் பணி நடந்து வரு­கிறது. 300க்கும் மேற்­பட்ட தூண்­கள் கட்­டப்­பட்டு உள்­ளன. இதில் அனைத்­துக் கட்­சி­யி­ன­ரின் சார்­பில் சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், 10 நாள்­க­ளுக்­குள் சுவ­ரொட்­டி­கள் அனைத்­தை­யும் அகற்­ற­வேண்­டும் என்று அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் மாவட்ட ஆட்­சி­யர் சமீ­ரன் உத்­த­ர­விட்­டார்.

ஆனால், 10 நாள்­க­ளுக்கு மேலா­கி­யும் சுவ­ரொட்­டி­கள் அகற்­றப்­ப­டா­த­தைக் கண்­டித்து, கோவை மாவட்­டத்­தைச் சேர்ந்த 300க்கும் மேலான பாஜ­க­வி­னர் நள்­ளி­ரவு நேரத்­தில் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

பாலத்­தின் தூண்­களில் திமுக ஒட்­டி­யி­ருந்த சுவ­ரொட்­டி­க­ளைக் கிழித்து எரிந்து தமி­ழக அர­சைக் கண்­டித்து, "ஊர் முழு­வ­தும் சுவ­ரொட்டி, ஊர் முழு­வ­தும் 'பிளக்ஸ்'. எடுக்­கச் சொன்­னால் வழக்கா?" என்று முழக்­க­மிட்­ட­னர்.

இதைத்­தொ­டர்ந்து, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கும் காவ­லர்­க­ளுக்­கும் இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்ட நிலை­யில், சுவ­ரொட்­டி­க­ளைக் கிழித்த பாஜ­க­வைச் சேர்ந்த 40 பேரை காவல்­து­றை­யி­னர் குண்டு கட்­டா­கத் தூக்­கிச்­சென்று கைது செய்­த­னர்.