உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் மாநில அரசு நிதியுதவி 'நாட்டுக்குச் சேவையாற்ற என் மற்றொரு மகனையும் அனுப்புவேன்'

உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் மாநில அரசு நிதியுதவி 'நாட்டுக்குச் சேவையாற்ற என் மற்றொரு மகனையும் அனுப்புவேன்'

2 mins read
715e1cf1-764e-4986-9178-b44be638a52c
-
multi-img1 of 2

மதுரை: ராணு­வத்­தில் பணி­யாற்றி வந்த இரட்­டை மகன்களில் ஒருவர் நாட்டுக்காக உயிரை நீத்துள்ள நிலையிலும், தன் மற்றொ­ரு மகனையும் நாட்டிற்குச் சேவையாற்ற அனுப்­பு­வேன் என்று உயி­ரி­ழந்த ராணுவ வீரர் லட்­சு­ம­ண­னின் தந்தை உருக்­க­மா­கக் கூறி­யுள்­ளார்.

ஜம்மு-காஷ்­மீ­ரில் பயங்­க­ர­வாதி களோடு நடை­பெற்ற சண்­டை­யில் தமி­ழக வீரர் லட்­சு­ம­ணன், 24, வீர மரணம் அடைந்தார்.

இந்தச் சம்­ப­வம் டி.புதுப்­பட்டி கிரா­மத்­தைச் சேர்ந்த அனைவரையும் சோகத்­தில் ஆழ்த்தியுள்­ளது.

ஜம்மு-காஷ்­மீர் மாநி­லம், ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது நேற்று முன்­தி­னம் அதி­கா­லை­யில் பயங்­க­ர­வா­தி­கள் இரு­வர் திடீர் தாக்­கு­தல் நடத்­தி­னர்.

அதனை முறி­ய­டிப்பதற்காக இந்­திய ராணுவ வீரர்­கள் நடத்­திய துப்­பாக்­கிச் சண்­டை­யில் பயங்­க­ர­வா­தி­கள் இருவரும் உயி­ரி­ழந்­த­னர்.

அதே­வே­ளை­யில் மூன்று இந்­திய வீரர்களும் உயி­ரி­ழந்­த­னர். இவர்­களில், மதுரை மாவட்­டம், திரு­மங்­க­லம் அருகே உள்ள டி.புதுப்­பட்­டி­யைச் சேர்ந்த லட்­சு­மணனும் ஒரு­வர். எஞ்­சிய இரு­வர் ராஜஸ்­தான், ஹரி­யானா மாநி­லத்தைச் சேர்ந்­த­வர்­கள்.

இந்நிலையில், "இன்­னு­யி­ரைத் தியா­கம் செய்த ராணுவ வீரர்­களுக்கு அஞ்­சலி, வீரவணக்­கம் செலுத்­து­கி­றேன்," என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

உயி­ரி­ழந்த ராணுவ வீரர் லட்சு­ ம­ணன் குடும்­பத்­துக்கு 20 லட்சம் ரூபாயை அரசு நிதி­யு­த­வி­யாக வழங்கவும் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கடந்த 2019 முதல் இந்­திய ராணு­வத்­தில் 'ரைபிள்மேனாக' லட்­சு­ம­ணன் பணி­யாற்றி வந்­தார். அவ­ரு­டைய பெற்­றோர் தர்­ம­ராஜ்- ஆண்­டாள். ராமன், லட்­சு­ம­ணன் இரட்­டை­யர்­கள். மகன்களுக்குத் திரு­ம­ணம் செய்து வைப்­ப­தற்­காக பெண் பார்த்து வந்த நிலை­யில், லட்­சு­ம­ணன் உயிரிழந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், நாட்­டிற்­கா­கச் சேவை­யாற்­றச் சென்ற லட்­சு­மணன், நாட்­டிற்­காக உயி­ரைக் கொடுத்­தது பெரு­மையே என்று கூறி­யுள்ள அவ­ர்களது தந்தை தர்­ம­ராஜ், இன்­னொரு மக­னை­யும் நாட்­டுக்­கா­கச் சேவை செய்ய அனுப்­பு­வேன் என்றும் கூறியுள்­ளார்.

லட்சுமணனின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவ ரது உடல் வைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப் படும் எனவும் ராணுவத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டிற்காகச் சேவையாற்றச் சென்ற

என் மகன் லட்சுமணன் உயிரைக் கொடுத்தது பெருமையே.

இதனால் நான் உடைந்து விடவில்லை. எனது இன்னொரு மகன் ராமனையும் நாட்டுக்காகச் சேவையாற்றத் துணிச்சலுடன் அனுப்புவேன்.

உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் (இடது)

தந்தை தர்மராஜ்.