சென்னை: சென்னை விமான நிலைய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், ஒரு பயணியிடம் இருந்து ஒரே சமயத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான 9 கிலோ 590 கிராம் ஹொக்கைன், ஹெராயின் போதைப்பொருள்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையம் 1932ஆம் ஆண்டு உருவான பின்னர், ஒரே நபரிடம் இருந்து இந்த அளவுக்கு போதைப்பொருள்கள் சிக்கியது என்பது இதுவே முதல்முறை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எத்தியோப்பியா நாட்டின் அடீஸ் அபாபா நகரிலிருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளை அதி காரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, இக்பால் பாஷா, 38, என்பவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, காலணிகள், உள்ளாடைகள், அவரது 'கோட்' ஆடையில் இருந்த ரகசியப் பாக்கெட்டுகளில் போதைப்பொருள் களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இக்பாலை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், பேங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த தாய் விமானத்தில் 15 ராஜ நாகம், இரு ஆமைகள், ஒரு குரங்கு ஆகியவற்றை ஒரு பயணியிடம் இருந்து பறிமுதல் செய்து, மீண்டும் அவற்றை பேங்காக்கிற்கே அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.