சென்னை: கோவில் சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறை தனது சொத்துகளாகக் கருதக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவற்றை அறநிலையத் துறை சட்டப்படி மட்டுமே குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடவேண்டும் எனவும் நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
திருவரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அற நிலையத்துறை உரிமை கோர தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

