சென்னை: பெண் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதுடன் பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்பதற்குத் தங்களைத் தாங்களே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஒரு தந்தையாக, தான் கேட்டுக்கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூர் கபா லீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொண்டு பேசினார்.
"கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது. ஏனெனில், ஒன்று அறிவு நலம் சார்ந்தது, மற்றது உடல் நலம் சார்ந்தது என்பதால் இவையெல்லாம் சமூக நலத்திட்டங்கள்," எனக் குறிப்பிட்டார்.
"மாநிலம் முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும்கூட எனது சொந்தத் தொகுதியான கொளத் தூருக்கு வருவது என்பது அலாதி யானது. இந்தக் கபாலீஸ்வரர் கல்லூரி எனது தொகுதியில் அமைந் திருப்பதில் பெருமகிழ்ச்சி.
"மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் ஒரே ஒரு பட்டத்துடன் நிறுத்திக்கொள்ளாதீர்கள். உயர்கல்வியைத் தொடருங்கள். பட்டம் பெற்ற பெண்கள் தகுதிக்கேற்ற பணிகளைத் தெரிவு செய்யுங்கள். பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்கவேண்டும்," என்று தந்தையாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கல்வி என்பது அனைவருக்கும் எளிதாக கிடைக்கவேண்டும் என்ற உண்மையான அக்கறையின் காரணமாகவே தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செயல்படுத்தி வருவதாகவும் முதல்வர் கூறினார்.

