சென்னை: அரசின் முக்கிய உத் தரவுகளைத் தண்டோரோ போட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தும் முறைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மீறுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில், தண்டோரா போடுவதற்கு மாற்று ஏற்பாடாக, வாகனங்களில் ஒலிபெருக்கிகளைக் கொண்டு மாநிலத்தின் கிராமப்புறங்களில் அறிவிப்புகளைச் செய்யலாம். இதன்மூலம் அரசின் முக்கியச் செய்திகளை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும்.
ஏற்கெனவே இத்தண்டோரா போடும் பணியில் ஊழியர்கள் யாரேனும் ஈடுபடுத்தப்பட்டிருந் தால், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துகொடுப்பதை ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை அமைப்புகள் உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.