வீசப்பட்ட காலணியைப் பாதுகாக்கும் அமைச்சர்

வீசப்பட்ட காலணியைப் பாதுகாக்கும் அமைச்சர்

2 mins read
fda70016-fc61-4002-a9c3-0b7e4b2060ab
பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன்.(இடம்) அமைச்சர் கார் மீது வீசப்பட்ட காலணி. படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: தனது கார் மீது வீசப்­பட்ட கால­ணியை தமி­ழக நிதி அமைச்­ச­ரான பிடி­ஆர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் பாது­காத்து வரு­கி­றார்.

"எனது ஊழி­யர்­கள் பாது­காப்­பாக வைத்­துள்­ள­னர். கால­ணி­யைத் திரும்­பப் பெற விரும்­பி­னால் தொடர்பு கொள்­ள­லாம்," என்று டுவிட்­டர் பதி­வில் அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

சென்ற சனிக்­கி­ழமை காஷ் மீரில் வீர­ம­ர­ண­ம­டைந்த மதுரை ராணுவ வீரர் லட்­சு­ம­ண­னின் உடலுக்கு அஞ்­சலி செலுத்­தி­விட்டு திரும்­பிய நிதி அமைச்­சர் பிடி­ஆர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜ­னின் காரை முற்றுகையிட்டு பாஜ­க­வி­னர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அப்­போது அவ­ரது கார் மீது காலணி வீசப்­பட்­டது.

தமி­ழக அர­சி­ய­லில் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­திய இந்த சம்­ப­வத்­தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அவர்­களை இம்­மா­தம் 26ஆம் தேதி வரை நீதி­மன்ற காவ­லில் வைக்க மதுரை மாவட்ட நீதி­மன்­றம் அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

இதற்­கி­டையே மதுரை மாந­கர் மாவட்ட பா.ஜ.க. தலை­வர் மருத்து வர் சர­வ­ணன் சனிக்­கி­ழமை நள்­ளி­ர­வில் தமி­ழக நிதி அமைச்­சர் பி.டி.ஆர்.பழ­னி­வேல் தியா­க­ரா­ஜ­னின் வீட்­டிற்­குச் சென்று நடந்த சம்­ப­வத்­திற்கு வருத்தம் தெரிவித் தார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய டாக்­டர் சர­வ­ணன், பாஜ­க­வி­லி­ருந்து தான் வில­கு­வ­தாக அறி­வித்­தார்.

"எனக்கு வெறுப்பு அர­சி­யல், மத அர­சி­யல் ஒத்துவர­வில்லை. எனது மன­தில் உள்ள விஷ­யத்தை அமைச்­ச­ரி­டம் தெரி­வித்­தேன். நான் பாஜ­க­வில் தொட­ர­வில்லை. இன்று காலை வில­கல் கடி­தத்­தைக் கொடுப்­பேன். சுய­ம­ரி­யா­தை­யு­டன் இருக்க வேண்­டும்.

"திமு­க­வில் இணை­வது குறித்து இது­வரை முடிவு எடுக்­க­வில்லை. திமு­க­வில் இணைந்­தா­லும் தப்­பில்லை. திமுக, எனது தாய் வீடு. 10-15 ஆண்­டு ­க­ளாக நான் உழைத்த கட்சி திமுக," என்று சனிக்­கி­ழமை இரவு தெரி­வித்­ தார்.

திமு­க­வைச் சேர்ந்த டாக்­டர் சர­வ­ணன் கடந்த ஆண்டு அக்­கட்­சி­யி­லி­ருந்து விலகி பாஜ­க­வில் இணைந்­தார்.

இந்த நிலை­யில் பாஜ­க­வில் இருந்து டாக்­டர் சர­வ­ணன் நீக்­கப் ­ப­டு­வ­தாக தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை அறி­வித்­துள்­ளார்.

கட்­சிக் கட்­டுப்­பாட்டை மீறி, களங்­கம் விளை­விக்­கும் வகை­யில் சர­வ­ணன் நடந்துகொண்­ட­தா­க­வும் கட்சி நிர்­வா­கி­கள், தொண்­டர்­கள் சர­வ­ணனைத் தொடர்பு கொள்ள வேண்­டாம் என்­றும் அண்­ணா­மலை தனது அறிக்கை வாயி­லா­கக் கேட்­டுக் கொண்டுள்­ளார்.