மாமல்லபுரத்தில் கோலாகலமான காற்றாடி திருவிழா

மாமல்லபுரத்தில் கோலாகலமான காற்றாடி திருவிழா

1 mins read
51be06ff-af24-4382-9692-d0c44d112261
சென்னை மாமல்லபுரத்தில் பறக்க விடப்பட்ட பல்வேறு வடிவிலான பட்டங்கள் காண்போரை உற்சாகமடைய வைத்தது. படம்: இபிஏ -

மாமல்­ல­பு­ரம்: மாமல்­ல­பு­ரம் கட­லோரப் பகு­தி­யில் அனைத்­து­லக காற்­றாடி திரு­விழா சனிக்­கி­ழமை தொடங்­கி­யது.

தமி­ழக சுற்­றுலாத் துறை பங்­க­ளிப்­பு­டன் 'குளோ­பல் மீடியா பாக்ஸ்' என்ற நிறு­வ­ன­ம் இந்­த பட்டம் விடும் திரு­வி­ழா­வுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரை இது நடைபெறுகிறது.

தமி­ழ­கத்­தில் முதல்­மு­றை­யாக நடை­பெ­றும் காற்­றாடி திரு­விழா, மாமல்­ல­பு­ரம், கிழக்கு கடற்­கரை சாலை பகுதி, மாநில சுற்­றுலா வளர்ச்­சிக் கழக கட­லோர திறந்­த­வெளி பகு­தி­யில் நடைபெற்றது.

சிறு, குறு, நடுத்­தர தொழில்­கள் அமைச்­சர் அன்­ப­ர­சன், சுற்­றுலா துறை அமைச்­சர் மதி­வேந்­தன் ஆகி­யோர் காற்­றாடி திரு­வி­ழாவை தொடங்கி வைத்­துள்­ள­னர்.

இந்­தி­யா­வி­லி­ருந்து தமி­ழ­கம், தெலுங்­கானா, ஆந்­திரா, புது­டெல்லி, குஜ­ராத் ஆகிய மாநி­லங்­களும் அமெ­ரிக்கா, தாய்­லாந்து உள்ளிட்ட வெளி­நா­டு­களும் இதில் பங்­கேற்றன.

இவர்­கள் 80 முதல் 100 காற்­றாடி­களைப் பறக்­க­விட்­ட­னர். வர்­ண­ஜா­லத்­து­டன் வானத்­தில் பல வடி­வில் பறந்த காற்­றா­டி­கள் காண்­போரை உற்­சா­கம் அடைய வைத்­தன. இர­வில் கலை நிகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன. இத்­திருவிழா­வுக்கு கிடைக்­கும் வர­வேற்­பைப் பொறுத்து அடுத்­த­டுத்த ஆண்­டு­களில் நடத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.