'தேசிய கொடியைப் பிடிக்கவும், தடியாக மாற்றவும் தெரியும்'

'தேசிய கொடியைப் பிடிக்கவும், தடியாக மாற்றவும் தெரியும்'

1 mins read
a09efb1c-2391-44d9-a25e-06ed38eeabc0
-

சென்னை: தேசிய கொடி­யைப் பிடிக்­க­வும் திருப்­பிப் பிடித்து தடி­யாக மாற்­ற­வும் தெரி­யும் என்று ஈவி­கே­எஸ் இளங்­கோ­வன் முழங்கி யுள்­ளார்.

நங்­க­நல்­லூர் பகு­தி­யில் இருந்து ஆதம்­பாக்­கம் வரை காங்­கி­ரஸ் சார்­பில் நேற்று பாத­யாத்­திரை நடை­பெற்­றது. தென்­சென்னை மேற்கு மாவட்ட தலை­வர் நாஞ்­சில் பிர­சாத் இதற்கு தலைமை தாங்­கி­னார். பாத யாத்­திரை பேர­ணியை முன்­னாள் மத்­திய அமைச்­சர் ஈ.வி.கே.எஸ்.இளங்­கோ­வன் கொடி அசைத்து தொடங்கி வைத்­தார். பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்­கோ­வன், "இந்­தி­யா­வின் 75வது சுதந்­திர தின பவள விழா­விற்கு காங்­கி­ரஸ்­கா­ரர்­கள் தான் சொந்­தக்­கா­ரர்­கள். தேசத்­திற்குத் துரோ­கம் செய்­த­வர்­கள், மூவர்ண கொடியை தூக்கிக் கொண்டு இருக்­கி­றார்­கள். தமி­ழக நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் காரில் தேசி­யக் ­கொ­டியை கட்­டிச் செல்­கி­றார். அவர் மீது பா.ஜன­தா­வி­னர் செருப்பு வீசு­கின்­ற­னர். தமி­ழக மக்­கள் பொங்கி எழுந்­தால் நீங்­கள் பஸ்­ப­மாகிவிடு­வீர்­கள். தேசத் துரோக புழுக்­களை அழிக்க நாங்­கள் ஆயு­தம் ஏந்­த­வும் தயங்க மாட்­டோம். காங்­கி­ரஸ் கட்­சி­க்கா­ரர் களுக்கு கொடியைப் பிடிக்­க­வும் தெரி­யும், கொடியைத் திருப்­பிப் பிடித்து தடி­யாக மாற்­ற­வும் தெரி­யும்," என்றார்.