பெரம்பலூர்: 'சிவாஜி' படத்தில் ஏழை களுக்கு ரஜினி உதவுவது போல், தன் கிராம மக்களின் சிரமங்களைப் போக்க தனி ஒருவராக களமிறங்கி உள்ளார் மலேசியாவில் வசிக்கும் தொழிலதிபர் பிரகதீஸ்குமார்.
சுதந்திர நாளில் தன் கிராமத்து மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதருவதற்காக ரூ.13 கோடியை வழங்குவதாக அறி வித்துள்ளார். தன் சொந்தப்பணத்தை மக்கள் நலத் திட்டங் களுக்கு வாரி வழங்கும் பிரகதீஸ்குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்பாடி, கடம்பூர், புதூர், அரசடி காடு, மேலகுணங்குடி ஆகிய ஐந்து கிராமங்களிலும் ஏறக்குறைய 10,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், இந்தக் கிராமங்களில் சரியான சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிவு நீர் கால்வாய், கழிவறை, குடிநீர் கிணறு வசதி என போதுமான வசதிகள் இன்றி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், மலையடிவாரப் பகுதி யான அரசடிகாடு பகுதியில் சாலை வசதிகளின்றி, விவசாயிகள் தங்க ளது விளைபொருள்களை விற்க முடியாமல் அல்லாடி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வூரில் பிறந்து மலேசியாவில் தொழிலதிபராக விளங்கும் பிரகதீஸ்குமார், சொந்த ஊருக்கு வந்த நிலையில், அங்கு தான் வளர்ந்த ஊரில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டார். அரசு அதிகாரிகளைச் சந்தித்த பிரகதீஸ்குமார், தான் பிறந்த மண்ணின் மக்களுக்காக தனது 'ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன்' சார்பில் ரூ.13 கோடியை வழங்கு வதாக அறிவித்து, முதல்கட்டமாக ரூ.90 லட்சத்துக்கான வரைவோலையை பேரூராட்சி அலுவலர் சிவராமனிடம் வழங்கி உள்ளார்.

