தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வங்கிக் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது

2 mins read
17e47d4c-9a79-4ccb-bc83-74773fed314e
-

சென்னை: சென்­னை­யில் நடந்த வங்­கிக்­கொள்­ளை­யில் ஏழு பேர் கொண்ட கும்­பல் ஈடு­பட்டுள்ளது தெரியவந்­துள்ள நிலை­யில், இந்தச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டார்.

கொள்ளை நடந்த 72 மணி நேரத்தில் நான்கு குற்றவாளிகளைத் தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.

இந்­தக் கொள்ளைச் சம்பவம் தொடர்­பாக கைதான பாலாஜி, சந்­தோஷ், சக்­தி­வேல் ஆகி­யோரிடம் இருந்து 18 கிலோ தங்க நகை­களும் இரு கார்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

நான்கு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் எஞ்சிய நகைகள் விரைவில் மீட்கப் படும் எனவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொள்ளை அடிக்­கப்­பட்ட 32 கிலோ நகை­களும் காப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தால் வாடிக்­கை­யா­ளர்­கள் அச்­சப்­ப­டத் தேவை­யில்லை என்று வங்கி நிர்­வா­கத்தினர் கூறியுள்­ளனர்.

காவல்துறை­யி­னர் முழுமை­யாக மீட்டு வந்­தால் நகை­யா­கவோ அல்­லது பண­மா­கவோ வாடிக்கையாளர் களிடம் திருப்­பித் தரப்­படும் என்றும் வங்கி உறுதி அளித்­துள்­ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனி­யார் நகைக்­க­டன் வங்கி யில் இரு நாள்களுக்கு முன்பு புகுந்த கொள்ளையர்கள், அங்­கி­ருந்த காவ­லா­ளி­யை­யும் ஊழி­யர்­க­ளையும் கட்­டிப் போட்­டு­விட்டு ரூ.20 கோடி மதிப்­புள்ள 32 கிலோ தங்­க­ ந­கை­களைத் திரு­டிச்­சென்­ற­னர்.

கொள்ளை அடித்த வங்­கி­யில் பதி­வான சிசி­டிவி கேம­ராக்­களையும் கொள்­ளை­யர்­கள் கையோடு எடுத்துச் சென்றுவிட்ட நிலை­யில், வங்கி அருகில் இருந்த கட்­ட­டங்­களில் பதி­வான கண்­கா­ணிப்­புக் கேம­ராக்­க­ளின் காட்­சி­கள் அடிப்­படை­யில் தனிப்­படைக் காவ­லர்­கள் துப்புதுலக்கி வரு­கின்­ற­னர்.

கொள்ளை அடிக்­கும் முன்பாக வங்கி முன்பு கொள்­ளை­யர்­கள் நோட்­ட­மி­டும் காட்­சியையும் தங்க நகையை மூன்று மூட்­டைகளில் அள்­ளிக்கொண்டு இரு சக்­கர வாக­னங்­களில் அவர்கள் தப்­பிச் செல்­லும் காட்­சி­யை­யும் காவ­லர்­கள் வெளி­யிட்­டுள்­ள­னர்.

அரும்­பாக்­கம் வங்­கிக் கொள்­ளைக்கு மூளை­யா­கச் செயல்­பட்ட முரு­கன் உள்­பட அதில் சம்­பந்­தப்­பட்ட ஏழு பேரும் உடற்பயிற்சிக் கூடத்தில் அறிமுகம் ஆன­வர்­கள் என்­று தெரியவந்­துள்­ளது.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முருகனுடன் சேர்ந்து பல நாள்கள் திட்டம் போட்டதாகவும் பின்னரே இதனை அரங்கேற்றியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.