மாணவர்களுக்கு ஆலோசனை: 800 மருத்துவர்கள் நியமனம்

மாணவர்களுக்கு ஆலோசனை: 800 மருத்துவர்கள் நியமனம்

2 mins read
c96529e4-9237-4872-99ce-e7b092606bbe
-

ஈரோடு: தமி­ழகப் பள்­ளி மாண­வர்­க­ளின் மன­தில் தன்­னம்­பிக் கையை வளர்க்­கும் வகை­யில், அவர்­க­ளுக்கு ஆலோ­ச­னை­கள் வழங்கி, அவர்­க­ளது மன­ந­லனை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­காக 800 மருத்­து­வர்­கள் நிய­மிக்­கப்­பட்டு உள்­ள­தாக மாநில பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் மகேஷ் பொய்யாமொழி தெரி­வித்­துள்­ளார்.

ஈரோடு புத்­த­கத் திரு­வி­ழாவைப் பார்­வை­யிட்ட அவர் செய்­தி­யா­ளர் களி­டம் பேசி­ய­போது, "பொது­வாக ஆண்­டுக்கு ஒரு­மு­றை­தான் ஒரு பள்­ளிக்கு மருத்­து­வர்­கள் ஆலோ சனை­கள் வழங்­கச் செல்­வார்­கள்.

"ஆனால், இப்­போ­தைய சூழ­லில் அதி­க­மா­னோ­ருக்கு ஆலோ­சனை வழங்­க­வேண்­டிய தேவை உள்ளதால், மூன்று மாதத்­திற்கு ஒரு­முறை பள்­ளி­க­ளுக்­குச் சென்று ஆலோசனை­கள் வழங்­க உள்ளனர்.

இதற்காக 800 மருத்­து­வர்­கள் நிய­மிக்­கப்­பட்டு உள்­ள­னர். முதல்­வர் மு.க.ஸ்டா­லின் இப்­ப­ணி­யைத் தொடங்கி வைத்துள்­ளார்," என்று கூறி­னார்.

தேர்­வு­களை எதிர்­கொள்ள பயம் கொள்­வது, குடும்­பப் பிரச்­சினை, தாங்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சினைகளைச் சரி­யான முறை­யில் கையா­ளத் தெரி­யா­மல் திண­று­வது உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் தமி­ழக மாண­வர்­கள் மன­மு­டைந்து உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இச்சூழ­லில், மாணவ, மாண­வி­ க­ளுக்கு மன­நல ஆலோசனை­களை வழங்குவது மிக­வும் முக்­கி­யம் என்­ப­தால், மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு முறை மருத்துவர்­கள் மாண­வர்­க­ளுக்­குப் பலவழி­க­ளி­லும் ஆலோ­சனைகள் கூறி அவர்களிடம் தன்­னம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வார்­கள் என்று ஈரோட்­டில் அளித்த பேட்­டி­யில் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

கடந்த 10 ஆண்­டு­க­ளாக தமி­ழ­கத்­தில் போதைப்பொருள்களின் புழக்­கத்தைத் தடுக்க கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ள­வில்லை.

சரி­யாக கவ­னம் செலுத்­தா­மல் விட்­டு­விட்ட பிரச்­சி­னை­கள் இப்­போது சமூகத்தைப் பாதிக்கத் தொடங்கியுள்­ள­தால், அவற்றை அடை­யா­ளம் கண்டு தீர்வு­காண நட­வ­டிக்கை எடுத்துவரு­கி­றோம்.

தமி­ழ­கத்­தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான பொதுத்தேர்வு திட்டத்­தில் எந்த மாற்­ற­மும் இல்லை.

இதில் எந்­தக் குழப்­ப­மும் இல்லா மல் அனைத்து மாண­வர்­களும் பாடத்­தில் கவ­னம் செலுத்­த­வேண்­டும் என்­றும் கூறினார்.

மாண­வர்­க­ளின் மன அழுத்­தத்­தைப் போக்க அரசு பல்­வேறு முயற்­சி­களையும் எடுத்து வரும் நிலையில், மாண­வர்­க­ளைப் பெற்­றோரும் தொடர்ந்து கண்­கா­ணித்து அவர்­க­ளது வளர்ச்­சிக்கு உத­விட வேண்­டும் என்­றும் அமைச்­சர் கேட்­டுக்­கொண்­டுள்ளார்.