கொள்ளை போன 32 கிலோ தங்க நகைகளும் மீட்பு

கொள்ளை போன 32 கிலோ தங்க நகைகளும் மீட்பு

1 mins read
352cb98a-e13f-4b37-93db-99181254bd6f
-

கோவை: சென்னை அரும்­பாக்­கம் தனி­யார் வங்­கி­யில் 32 கிலோ தங்கநகை­கள் கொள்ளைபோன நிலை­யில், இப்­போது அந்த நகை­கள் அனைத்­தும் மீட்­கப்­பட்டு விட்­ட­தாக காவல்­துறை தெரி வித்­துள்­ளது.

முதல்கட்­ட­மாக கைது செய்­யப்­பட்ட மூவ­ரி­டம் இருந்து 18 கிலோ தங்கநகை­கள் மீட்­கப்­பட்ட நிலை­யில், அடுத்­த­டுத்து நடந்த கைது, மீட்பு நட­வ­டிக்­கை­கள் மூலம் கொள்ளைபோன 32 கிலோ நகை­களும் மீட்­கப்­பட்­டுள்ளதா­க­வும் உரிய நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பின்­னர் அனைத்து நகை­களும் வங்­கி­யில் ஒப்­படைக்­கப்­படும் என்­றும் காவல்­துறை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­தக் கொள்­ளைச் சம்­ப­வம் தொடர்­பாக ஏற்­கெ­னவே பாலாஜி, சந்­தோஷ், சக்­தி­வேல், முக்­கிய குற்­ற­வா­ளி­யான முரு­கன் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், சூர்யா என்­ப­வ­ரை நேற்று தனிப்­படை காவ­லர்­கள் கைது செய்­தனர்.

சென்­னை­யில் நடந்த வங்­கிக்­கொள்­ளை­யில் ஏழு பேர் கொண்ட கும்­பல் ஈடு­பட்­டுள்­ளது தெரி­ய­வந்­துள்ள நிலை­யில், ஐவர் பிடி­பட்­டுள்­ள­னர்.

எஞ்­சிய இரு கொள்­ளை­யர்­கள் கோவை­யில் தங்­கி­யி­ருப்­ப­தாகத் தக­வல் கிடைத்­ததை அடுத்து, அவர்­க­ளைப் பிடிக்க கோவைக்கு விரைந்­துள்­ள­னர் தனிப்­படை காவ­லர்­கள்.