எழும்பூர்-கோடம்பாக்கத்துக்கு இடையே இயக்கப்பட்ட பழைய நீராவி ரயில்

எழும்பூர்-கோடம்பாக்கத்துக்கு இடையே இயக்கப்பட்ட பழைய நீராவி ரயில்

1 mins read
c2ea458a-2ba1-437b-8002-e67c916a3b37
சுதந்திர தினத்தை ஒட்டி, இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை 'இ.ஐ.ஆர்-21' என்ற உலகின் மிகவும் பழமையான நீராவி இயந்திர ரயில் இயக்கப்பட்டது. இதனை மக்கள் ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்தனர். இதில், தெற்கு ரயில்வே மேலாளர் பி.ஜி.மல்லையா மற்றும் அதிகாரிகள் பயணம் செய்தனர்.படம்: ஏஎஃப்பி -

சென்னை: நாட்­டின் 75வது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு, இந்­திய ரயில்­வே­யின் பாரம்­ப­ரி­யத்தை நினை­வு­கூ­ரும் வித­மாக, சென்னை எழும்­பூ­ரி­லி­ருந்து கோடம்­பாக்­கம் வரை 'இ.ஐ.ஆர்-21' என்ற நீராவி இயந்­திர ரயில் இயக்­கப்­பட்­டது.

இந்த ரயில் 1855ஆம் ஆண்டு இங்­கி­லாந்­தில் இருந்து இந்­தி­யா­வின் பயன்­பாட்­டிற்­காகக் கொண்டு­ வ­ரப்­பட்டு அவுரா-ராணிகாஞ்ச் பகு­தி­யில் இயக்­கப்­பட்­டது.

அதன்­பின்­னர், இந்­தி­யா­வில் 55 ஆண்­டு­கள் தொடர்ந்து பயன்­பாட்­டில் இருந்து வந்த இந்த ரயில், 1909ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் பீகார் மாநி­லம், ஜமால்­பூர், மேற்கு வங்க மாநி­லம், ஹவுரா ரயில் நிலை யங்­களில் 101 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக காட்­சிப் பொரு­ளாக இருந்துவந்­தது.

இதைத்­தொ­டர்ந்து பெரம்­பூ­ரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்­சா­லைக்கு கடந்த 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்டு, மறு­சீ­ர­மைக்­கப்­பட்டு புதுப்­பிக்­கப்­பட்­டது. அது முதல் ஒவ்­வொரு சுதந்­திர தினத்­தன்­றும், பாரம்­ப­ரிய ரயில் இயக்­கத்தை நினைவு கூரும் வகை­யில் சென்னை யில் இந்த ரயில் தொடர்ந்து இயக்­கப்­பட்டு வரு­கிறது. இது­வரை 8 முறை இயக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா கட்­டுப்­பா­டு­க­ளால் இயக்­கப்­ப­டா­மல் இருந்த இந்த ரயில் 9வது முறை­யாக இப்போது இயக்­கப்பட்டுள்ளது. 167 ஆண்டு பழ­மை­யான இந்த ரயில் நிலக்­கரி மூலம் நீராவியால் இயங்­கக்­கூ­டி­யது. விசில் சத்­தத்­து­டன் 'குபுகுபு' என புகையை வெளி­யேற்­றி­ய­படி செல்லும் இந்த ரயிலின் அழ­கைக் கண்டு ரசிக்க ஏரா­ள­மான குழந்­தை­களும் பெரியோர்களும் ரயில் நிலை­யங்­களில் திரண்டு நின்றனர்.