பெண் உட்பட நால்வருக்கு இளைஞர் விருது அப்­துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளால் சமூகத்தில் சிறந்த அங்கீகாரம்

பெண் உட்பட நால்வருக்கு இளைஞர் விருது அப்­துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளால் சமூகத்தில் சிறந்த அங்கீகாரம்

2 mins read
f7e9c6a5-7a8a-4af5-97f2-2b9d6487ebd8
இடது படம்: எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.மேல் படம்: டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதைப் பெற்ற முனைவர் இஞ்ஞாசி முத்து, தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை மாணவர்களின் உதவித் தொகைக்குப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்தார். முன்னணி அறிவியல் இதழ்களில் 700க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 31 புத்தகங்களையும் எழுதி பதிப்பித்துள்ளார். படம்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: ெசன்­னை­யில் நடந்த 75வது சுதந்­திர தின விழா­வில் பல்­வேறு துறை­க­ளி­லும் தங்­க­ளது பங்­க­ளிப்பைச் சிறப்­பா­கச் செய்­த­வர் களுக்கு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன. 'முதல்­வ­ரின் மாநில இளை­ஞர் விருது' ஒரு பெண் உட்­பட நால்வருக்கு வழங்­கப்­பட்­டது.

இவ்விரு­தைப் பெற்­ற­வர்­க­ளுக்கு ஒரு லட்­சம் ரூபாய் ரொக்­கம், பாராட்­டுச் சான்றிதழ், பதக்­கத்தை முதல்­வர் ஸ்டா­லின் வழங்­கி­னார்.

மாநில இளை­ஞர் விருதை விஜ­ய­கு­மார், ஸ்ரீகாந்த், முக­மது ஆசிக், சிவ­ரஞ்­சனி ஆகியோர் பெற்றனர்.

விஜ­ய­கு­மார் பேசு­கை­யில்,"உக்­ரேன்-ரஷ்யா போரின்­போது பதற்ற நிலை­யில் இருந்த 35 தமி­ழக மாண வர்­களை அர­சு­டன் இணைந்து போக்­கு­வ­ரத்து ஏற்­பாடுகளைச் செய்து, மீட்­கும் பணி­களில் ஈடு­பட்­டேன். விரு­துக்­காக நான் இதைச் செய்­ய­வில்லை," என்றார்.

பாலாற்­றுப் பகு­தி­யில் 25 ஏக்­கர் வனத்தை உரு­வாக்கி இருப்­ப­தற்­காக விருது வழங்­கப்­பட்­டதாக ஸ்ரீகாந்த் கூறி­னார்.

சிவ­ரஞ்­சனி கூறுகையில், 2015 முதல் பாரம்­ப­ரிய நெல் ரகங்­களை மீட்டு வரு­கி­றேன். இந்­தியா முழு வதும் 1,250க்கும் மேற்­பட்ட பாரம்­பரிய நெல்விதை­களைச் சேக­ரித்­துள்ளேன் எனத் தெரி­வித்­தார்.

முக­மது ஆசிக் கூறு­கை­யில், உற­வி­னர்­க­ளால் கைவி­டப்­பட்ட ஆத­ர­வற்ற 12,000க்கும் மேற்­பட்ட சட­லங்­களை எடுத்து நல்­ல­டக்­கம் செய்­த­தற்­காக மாநில இளை­ஞர் விருது பெற்றிருக்­கி­றேன் என்றார்.

வீர­தீரச் செயல் புரிந்த நாகப்­பட்டி னத்­தைச் சேர்ந்த எழி­ல­ர­சிக்கு கல்­பனா சாவ்லா விருது வழங்­கப்பட்­டது. இவ்விருதை சமூகத்தில் கிடைத்த சிறந்த அங்கீகார­மாகப் பார்ப்பதாக இவர் கூறியுள்ளார்.

எழி­ல­ரசி கூறு­கை­யில், "கோயில் குளத்­தில் ஒரு சிறு­வன் வழுக்கி விழுந்­து­விட்­டான். அவ­னைக் காப்­பாற்­றச் சென்ற மற்­றொரு சிறு­வ­னும் விழுந்­து­விட்­டான். இரு­வ­ரை­யும் காப்­பாற்ற நான் குளத்­தில் இறங்­கி­ய­போது என்னாலும் அவர்­களைக் காப்­பாற்றி மேலே கொண்டு­வர முடி­ய­வில்லை. ஏனெனில், எனக்­கும் நீச்­சல் தெரி­யாது. 15 நிமி­டம் வரை இரு சிறுவர்க­ளை­யும் பிடித்­துக்­கொண்டே போரா­டிக்கொண்டி­ருந்­தேன். ஊர் மக்­கள் எங்­க­ளைக் காப்­பாற்றினார்­கள்," என்று கூறி­னார்.

அப்­துல் கலாம் விருது பெற்ற பாளையங்­கோட்டை தூய சவே­ரி­யார் கல்­லூ­ரி­யில் உள்ள ஆய்வு நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ராக உள்­ளார் இஞ்­ஞாசி முத்து. இந்­தி­யா­வின் 10வது சிறந்த விஞ்­ஞா­னி­யாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள இவர், 700க்கும் மேற்­பட்ட ஆய்­வுக் கட்­டு­ரை­க­ளை­யும் 31க்கும் மேற்­பட்ட புத்­த­கங்­க­ளை­யும் எழுதி பதிப்­பித்­துள்­ளார்.