கொடைக்கானலுக்கு 3 நாள்களில் 100,000 பேர் வருகை

கொடைக்கானலுக்கு 3 நாள்களில் 100,000 பேர் வருகை

1 mins read
ef3b0f8c-07f0-4a81-8435-63a4da694967
-

கொடைக்­கா­னல்: சுதந்­திர தினத்­திற்கு சனி, ஞாயிறு, திங்­கள் என மூன்று நாள்­கள் தொடர்ச்­சி­யான விடு­முறை கிடைத்­தது. அதைக் கொண்­டா­டும் வகை­யில் மக்­கள் சுற்­று­லாத் தலங்­கள் நோக்கி படை­யெ­டுக்­கத் தொடங்­கி­னர். அவ்­வ­கை­யில் கொடைக்­கா­ன­லில் என்­றும் இல்­லாத வகை­யில் சுற்­று­லாப் பய­ணி­கள் கூட்­டம் பன்­ம­டங்கு அதி­க­ரித்­தது. கடந்த மூன்று நாள்க­ளாக கொடைக்­கா­னல் நகர்ப் பகு­தி­யி­லும், முக்­கிய சுற்­று­லாத் தலங்­க­ளி­லும் கடு­மை­யான போக்கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது.

கடந்த 3 நாள்­களில் மட்­டும் நூறா­யி­ரத்­திற்­கும் அதி­க­மான சுற்­று­லாப் பய­ணி­கள் வந்­த­தால் கடும் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது.

விடு­தி­களில் முன்­ப­திவு செய்­யா­மல் வந்த பல­ரும் தங்­கு­வ­தற்கு விடுதி கிடைக்­கா­மல் இர­வு­நே­ரத்­தில் வாக­னங்­க­ளிலே உறங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

கொடைக்­கா­னல் பகு­தி­க­ளி­லுள்ள அனைத்து காட்­டேஜ்­க­ளி­லும், தங்­கும் விடு­தி­க­ளி­லும் அறை­கள் நிரம்­பின.

அப்­ப­டியே விடுதி கிடைத்­தா­லும் கட்­ட­ணம் வழக்­கத்­தை­விட மூன்று மடங்கு அதி­கம். அதே­போல் போக்கு­வ­ரத்­துக் கட்­ட­ண­மும் பன்மடங்கு அதி­க­ரித்­தது.

மோயர் பாய்ண்ட், தூண்­பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட், பிரை­யண்ட் பூங்கா, ரோஸ் கார்­டன் ஆகிய பகு­தி­களில் கூட்­டம் அதிக அள­வில் காணப்­பட்­டது. மூஞ்­சிக்­கல், அப்­சர்­வேட்­டரி பகு­தி­களில் அடிக்­கடி போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­ட­தால் வாக­னங்­கள் நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருந்­தன.