'விடுதலைப் போரில் வீரத் தமிழகம்' கண்காட்சி

'விடுதலைப் போரில் வீரத் தமிழகம்' கண்காட்சி

1 mins read
5dca2c2f-cb20-4da5-9243-67dcc5c4edf8
-

சென்னை: சுதந்­திர தினத்­தை­யொட்டி இந்­தியா முழு­தும் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அவ்­வ­கை­யில் சென்­னை­யில், சுதந்­தி­ரப் போராட்ட வீரர்­களை நினை­வு­கூ­ரும் வகை­யில், கலை­வா­ணர் அரங்­கத்­தில் 'விடு­த­லைப் போரில் வீரத்­த­மி­ழ­கம்' என்ற தலைப்­பில் முப்­ப­ரி­மான ஒளி, ஒலி கண்­காட்சி அமைக்­கப்­பட்­டுள்­ளது.

சுதந்­திர போராட்ட வீரர்­க­ளின் தியா­கங்­க­ளை­யும், நாடு சுதந்­தி­ரம் பெற அவர்­கள் அனு­ப­வித்த இன்­னல்­க­ளை­யும் நினை­வு­கூ­ரும் வகை­யில் சென்னை திரு­வல்­லிக்­கே­ணி­யில் உள்ள கலை­வா­ணர் அரங்­கத்­தில் 'விடு­த­லைப் போரில் வீரத் தமி­ழ­கம்' என்ற முப்­ப­ரி­மாண ஒளி, ஒலி கண்­காட்­சியை தமிழ் நாடு அரசு ஏற்­பாடு செய்­துள்­ளது.

இந்­தக் கண்­காட்­சியை இந்து சமய அற­நி­லை­யத் துறை அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு, செய்­தித்­துறை அமைச்­சர் மு.பெ.சாமி­நா­தன் தொடங்கி வைத்­த­னர்.

மின் திரை­யில், இந்­தி­யா­வுக்கு சுதந்­தி­ரம் பெற்­றுத்­தர பாடு­பட்ட சுதந்­திரப் போராட்ட வீரர்­க­ளின் தியா­கங்­களும், இந்­தி­யா­வின் சுதந்­திர வர­லா­றும் காட்­சி­க­ளாக திரை­யி­டப்­பட்­டன.

கண்­காட்­சி­யில் சுதந்­தி­ரத்­துக்­காக பாடு­பட்ட வீரர்­கள், தலை­வர்­க­ளின் வடி­வ­மைப்­பில் பொம்­மை­கள், படங்­கள், ஓவி­யங்­கள், விளக்­கப்படங்கள் ஆகி­யவை பொதுமக்­க­ளின் பார்­வைக்­காக காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தன. நாட்­டுக்­கா­கப் பாடு­பட்ட தமி­ழர்­களை மக்­கள் அறிந்து கொள்ள இந்­தக் கண்­காட்சி உத­வி­யது.