உலகப்போரில் ஒலித்த சங்கு மீண்டும் ஒலித்தது

உலகப்போரில் ஒலித்த சங்கு மீண்டும் ஒலித்தது

1 mins read
9e067dc9-f678-425e-b638-4501c7c252b0
ஒலி எழுப்பிய போர் சங்கு. படம்: தமிழக ஊடகம் -

தஞ்­சா­வூர்: இரண்­டாம் உல­கப் போரின்­போது, இரவு நேரங்­களில் விமா­னங்­கள் மூலம் குண்­டு­கள் வீசப்­பட்­டன.

அப்­போது, போர்விமா­னங்க ளின் பார்­வை­யில், பூமி­யில் உள்ள நக­ரங்­கள் தெரி­யா­மல் இருப்­ப­தற்­காக இரவு நேரங்­களில் அனைத்து விளக்­கு­களும் அணைப்பதற்கு சங்கு ஒலிக்­கப்­படும்.

தஞ்­சா­வூ­ரில் ஆயு­தப் படைத் திட­லின் பின்­பு­றத்­தில் இரும்­புத்­தூண்­களில் போர் சங்கு அமைக்­கப்­பட்­டி­ருக்கும். இந்த சங்கு ஒலித்­த­தும் விளக்­கு­களை அணைக்­க­வேண்­டும் என்­பது அரசு உத்­த­ர­வாக இருந்­தது.

1967ஆம் ஆண்­டுக்­குப் பிறகு பொது­மக்­க­ளுக்கு நேர காலத்தை தெரி­யப்­ப­டுத்த இந்த சங்­கு­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

தின­மும் காலை 10, மதி­யம் 1 மணி, மாலை 5 மணி என மூன்று முறை சங்கு ஒலித்­தது.

இந்­நி­லை­யில், பரா­மரிப்பு இல்­லாத கார­ணத்­தால் 1980க்குப் பிறகு இந்­தச் சங்கு செயல்­ப­ட­வில்லை.

தஞ்சை மாந­க­ராட்சி நிர்­வா­கம் இந்­தச் சங்கை சீர­மைத்து இந்த ஆண்­டின் 75வது சுதந்­திர தினத்­தன்று மீண்­டும் ஒலிக்கவைத்­தது.

இது­கு­றித்து தஞ்சை மேயர் ராம­நா­தன் கூறு­கை­யில், "1939ல் இச்சங்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

"இதை மீண்­டும் புதுப்­பித்து இப்போது ஒலிக்க வைத்­துள்­ளோம். இதே­போன்ற சங்­கு­களை தஞ்சை­யில் ஆறு இடங்­களில் அமைத்து, தின­மும் காலை 6, காலை 9, மதி­யம் 12, மாலை 6, இரவு 9 மணி என ஐந்து முறை ஒலிக்கவைத்து வரு­கி­றோம்," என்று கூறி­னார்.